பயணித்துக் கொண்டிருக்கிறேன்...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
எங்கு செல்கிறேன் என புரியாமல்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...
என்னோடு சேர்ந்து
எனக்குத் தெரியாமலே
என்னைத் தொடர்ந்து வருகிறாள்...
ஓரப்பார்வையின் உறுத்தலில்
நான் திரும்ப
முகம் மறைக்க எத்தனிக்கிறாள்
மேகத்தைக் கொண்டு...
என்னையும் பார்க்குமிவள் யாரோ????
ஆடை விலகாதோ - முழு
தரிசனம் கிடைக்காதோ...
திரும்பி பார்த்து திரும்பி பார்த்து
பயணிக்கிறேன்...
சட்டென்ற ஒரு பொழுதில்
வெட்கம் விட்டு முழுமுகம் காட்டினாள்...
பட்டென நின்றதென் கால்கள்...
கண்ணோடு கண் நோக்கியவள்
முழுதுமாய் மறைத்தாள்
கனப்பொழுதில் தன்னை...
கண்வழியே நுழைந்தவள்
கனவாகி மறைந்தனள்...
முன்னோக்கி நகர மறுத்தன கால்கள்
மண்ணோக்கி பார்க்க மறுத்தன கண்கள்...
முடிவானது...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
கண்களின் துணைதேடிய பயணம்
நாளையும்.!!!
சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Tuesday, May 10, 2011
இன்னொருமுறை
எங்கோ… என்றோ…
விட்டுச் சென்றதைத்
தொடர்ந்து முடிக்க
இங்கே இன்று ஜனித்திருக்கிறேன்…
விட்ட பணி நினைவுடன்
கருவறையில் தவம்கிடந்தேன்…
தவம்கலைந்த நொடியில்
தவத்திற்கான காரணம் தொலைத்தேன்…
ஏதேதோ தேடல்
புறத்திலும் அகத்திலுமாய்…
தேடும் பொருள்
இன்னதென்றுணராமல் தேடுகின்றேன்…
தேடலின் காரணம்
உணர்ந்தபொழுதில்
தேடி நின்றது மரணத்தை
எனதுடல்…
தேடலை விட்டு வைத்து
மீண்டும் தவம்கிடக்கிறேன்…
தேடலை முடிக்க; கருவறையில்…
இன்னுமொருமுறை.!
விட்டுச் சென்றதைத்
தொடர்ந்து முடிக்க
இங்கே இன்று ஜனித்திருக்கிறேன்…
விட்ட பணி நினைவுடன்
கருவறையில் தவம்கிடந்தேன்…
தவம்கலைந்த நொடியில்
தவத்திற்கான காரணம் தொலைத்தேன்…
ஏதேதோ தேடல்
புறத்திலும் அகத்திலுமாய்…
தேடும் பொருள்
இன்னதென்றுணராமல் தேடுகின்றேன்…
தேடலின் காரணம்
உணர்ந்தபொழுதில்
தேடி நின்றது மரணத்தை
எனதுடல்…
தேடலை விட்டு வைத்து
மீண்டும் தவம்கிடக்கிறேன்…
தேடலை முடிக்க; கருவறையில்…
இன்னுமொருமுறை.!
Thursday, May 5, 2011
தேடல் துவங்கியதே
முதல்பார்வை சொல்லிடுமோ நமக்குள்ள சொந்தமதை
முகம்பார்க்க பொங்கிடுமோ நம்முள்ளே காதல்மழை
எனக்காகப் பிறந்தவளே எங்கேநீ உள்ளாயோ
என்னென்ன கனவுடனே என்னைநீ தேடுறியோ
அஞ்ஞாத வாசமது முடிந்திடும்நாள் எப்போதோ
அன்னியமாய் இருந்திடும்நாம் சேர்ந்திடும்நாள் அப்போதோ…Wednesday, May 4, 2011
பயணங்கள் இனிப்பதில்லை
சன்னலோர இருக்கை இல்லாமல்
குழந்தையின் அழுகை சத்தம் இல்லாமல்
பாட்டோ படமோ இல்லாமல்
நடத்துனர் கொடுக்க மற(று)க்கும் சில்லரை இல்லாமல்
பேச பக்கத் துணை இல்லாமல்
மூட்டை முடிச்சுகளின் இடிபாடு இல்லாமல்
பயணங்கள் இனிப்பதில்லை...
சிலருக்கு மட்டும்
பயணச்சீட்டு வாங்காத பயணம் இல்லாமல்.!
குழந்தையின் அழுகை சத்தம் இல்லாமல்
பாட்டோ படமோ இல்லாமல்
நடத்துனர் கொடுக்க மற(று)க்கும் சில்லரை இல்லாமல்
பேச பக்கத் துணை இல்லாமல்
மூட்டை முடிச்சுகளின் இடிபாடு இல்லாமல்
பயணங்கள் இனிப்பதில்லை...
சிலருக்கு மட்டும்
பயணச்சீட்டு வாங்காத பயணம் இல்லாமல்.!
Tuesday, May 3, 2011
கருக்கலைப்பு
நான் என்ன தவறு செய்தேன்?
மரணித்துக் கொண்டிருக்கும்
என் இறுதி நேர
மரண சாசணம் இது...
நான் நீதி கேட்கவில்லை
காரணத்தைக் கேட்கிறேன்....
நான் என்ன தவறு செய்தேன்?
மூன்று திங்களுக்கு முன்பு
இலட்சம் கோடி எதிரிகளை வென்று
வெற்றிக்கனியை ருசித்தவன் நான்...
வெற்றிப்பெருமிதத்தில்
நாளுக்கு நாள்
சதை போட்டு விட்டேன்...
மூன்று நாட்களுக்கு முன்புதான்...
எனது இருப்பை உணர வைக்க
நான் வாழ்ந்த இடத்தில்
புரட்சி செய்தேன்...
புரட்சி... ஆம்.!
நான் வாழ்ந்த இடத்தின்
உரிமையாளருக்குக் குடலைப் புரட்டும்
புரட்சி.!
அன்றிலிருந்து
ஊட்டமில்லை - எனக்கு
வாழத் தெம்புமில்லை...
சக்தியற்று கிடந்த என்மேல்
இன்று
திராவக வீச்சு...
இத்திராவகத்தின் எரிச்சல்
தாங்க முடியவில்லை...
இதோ.! இறந்து கொண்டிருக்கிறேன்...
மீண்டும் கேட்கிறேன்...
காரணத்தைச் சிந்தியுங்கள்...
என் மரணத்திற்குப் பின்னாவது...
நான் என்ன தவறு செய்தேன்?
மரணித்துக் கொண்டிருக்கும்
என் இறுதி நேர
மரண சாசணம் இது...
நான் நீதி கேட்கவில்லை
காரணத்தைக் கேட்கிறேன்....
நான் என்ன தவறு செய்தேன்?
மூன்று திங்களுக்கு முன்பு
இலட்சம் கோடி எதிரிகளை வென்று
வெற்றிக்கனியை ருசித்தவன் நான்...
வெற்றிப்பெருமிதத்தில்
நாளுக்கு நாள்
சதை போட்டு விட்டேன்...
மூன்று நாட்களுக்கு முன்புதான்...
எனது இருப்பை உணர வைக்க
நான் வாழ்ந்த இடத்தில்
புரட்சி செய்தேன்...
புரட்சி... ஆம்.!
நான் வாழ்ந்த இடத்தின்
உரிமையாளருக்குக் குடலைப் புரட்டும்
புரட்சி.!
அன்றிலிருந்து
ஊட்டமில்லை - எனக்கு
வாழத் தெம்புமில்லை...
சக்தியற்று கிடந்த என்மேல்
இன்று
திராவக வீச்சு...
இத்திராவகத்தின் எரிச்சல்
தாங்க முடியவில்லை...
இதோ.! இறந்து கொண்டிருக்கிறேன்...
மீண்டும் கேட்கிறேன்...
காரணத்தைச் சிந்தியுங்கள்...
என் மரணத்திற்குப் பின்னாவது...
நான் என்ன தவறு செய்தேன்?
Subscribe to:
Posts (Atom)