Monday, May 30, 2011

கிறுக்கல்கள் இரண்டு

கற்பு:

கற்போடே வாழ்கிறேன்.!
உறவாடும் பொழுதில்
இன்னொருவனை நினையாமல்...
பணத்திற்காய் மட்டுமே பாயை விரித்தாலும்
நான்...
பத்தினியாய் வாழும் பலர்???


பெயரில்லாதது
:

எதிர்காலமே நீயென்றிருந்ததால்.!
எதிர்காலத்தின் பயம்
இருந்ததில்லை என்றும்
உன்நிழலில் இருந்த பொழுதுகளில்...

Tuesday, May 10, 2011

தொடர் பயணம்

பயணித்துக் கொண்டிருக்கிறேன்...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
எங்கு செல்கிறேன் என புரியாமல்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


என்னோடு சேர்ந்து
எனக்குத் தெரியாமலே
என்னைத் தொடர்ந்து வருகிறாள்...

ஓரப்பார்வையின் உறுத்தலில்
நான் திரும்ப
முகம் மறைக்க எத்தனிக்கிறாள்
மேகத்தைக் கொண்டு...

என்னையும் பார்க்குமிவள் யாரோ????

ஆடை விலகாதோ - முழு
தரிசனம் கிடைக்காதோ...
திரும்பி பார்த்து திரும்பி பார்த்து
பயணிக்கிறேன்...

சட்டென்ற ஒரு பொழுதில்
வெட்கம் விட்டு முழுமுகம் காட்டினாள்...
பட்டென நின்றதென் கால்கள்...

கண்ணோடு கண் நோக்கியவள்
முழுதுமாய் மறைத்தாள்
கனப்பொழுதில் தன்னை...

கண்வழியே நுழைந்தவள்
கனவாகி மறைந்தனள்...
முன்னோக்கி நகர மறுத்தன கால்கள்
மண்ணோக்கி பார்க்க மறுத்தன கண்கள்...

முடிவானது...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
கண்களின் துணைதேடிய பயணம்
நாளையும்.!!!

இன்னொருமுறை

எங்கோ… என்றோ…
விட்டுச் சென்றதைத்
தொடர்ந்து முடிக்க
இங்கே இன்று ஜனித்திருக்கிறேன்…

விட்ட பணி நினைவுடன்
கருவறையில் தவம்கிடந்தேன்…
தவம்கலைந்த நொடியில்
தவத்திற்கான காரணம் தொலைத்தேன்…

ஏதேதோ தேடல்
புறத்திலும் அகத்திலுமாய்…
தேடும் பொருள்
இன்னதென்றுணராமல் தேடுகின்றேன்…

தேடலின் காரணம்
உணர்ந்தபொழுதில்
தேடி நின்றது மரணத்தை
எனதுடல்…

தேடலை விட்டு வைத்து
மீண்டும் தவம்கிடக்கிறேன்…
தேடலை முடிக்க; கருவறையில்…
இன்னுமொருமுறை.!

Thursday, May 5, 2011

தேடல் துவங்கியதே

முதல்பார்வை சொல்லிடுமோ நமக்குள்ள சொந்தமதை

முகம்பார்க்க பொங்கிடுமோ நம்முள்ளே காதல்மழை

எனக்காகப் பிறந்தவளே எங்கேநீ உள்ளாயோ

என்னென்ன கனவுடனே என்னைநீ தேடுறியோ

அஞ்ஞாத வாசமது முடிந்திடும்நாள் எப்போதோ

அன்னியமாய் இருந்திடும்நாம் சேர்ந்திடும்நாள் அப்போதோ…

Wednesday, May 4, 2011

பயணங்கள் இனிப்பதில்லை

சன்னலோர இருக்கை இல்லாமல்
குழந்தையின் அழுகை சத்தம் இல்லாமல்
பாட்டோ படமோ இல்லாமல்
நடத்துனர் கொடுக்க மற(று)க்கும் சில்லரை இல்லாமல்
பேச பக்கத் துணை இல்லாமல்
மூட்டை முடிச்சுகளின் இடிபாடு இல்லாமல்
பயணங்கள் இனிப்பதில்லை...
சிலருக்கு மட்டும்
பயணச்சீட்டு வாங்காத பயணம் இல்லாமல்.!