Monday, May 30, 2011

தோல்வியும் சுகம்

உன்னோடு பேசும்
ஒவ்வொரு முறையும்
தோற்று நிற்கிறேன் நான்.!
முடிவெடுத்தேன்
எப்படியும் இன்று ஜெயித்து விடுவதாய்...
உன் வரவை எதிர்பார்த்து.!

உன்னைக் கண்டதும்
பேசாமலே வெற்றி பெற்றதாய் உணர்வு...
மெதுவாய் கேட்டேன்
என்னுள் நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?

கள்ளச் சிரிப்புடன்
சொல்லேன் கேட்கலாம்! என்றாய்...

நுரையீரலில் சுவாசகாற்றாய்
இதயத்தின் துடிப்புகளாய்
மூளையின் சிந்தனை ஓட்டமாய்
என்னுடல் முழுதும் வியாபித்திருக்கிறாய் என்றேன்...

பொய்யாக முகம் வாடி
எனக்கு நீ அவ்வாறு இல்லை என்றாய்...
பின் எப்படி என்றேன் நான்?
என்னுள்ளே மட்டுமல்ல
என் வெளியேயும்
பார்க்குமிடமெங்கும் நீயே வியாப்பித்திருக்கிறாய் என்றாய்...
வெற்றிச் சிரிப்போடு.!

இன்றும் எனை வென்று விட்டாயா
இறுக்கத்துடன் கேட்டேன்...
உன்னைப் போல பேச கற்றுத் தாயேன்?

இறுக்கி அனைத்து சொன்னாய்
நீ நீயாக இருப்பதாலேயே எனக்குப் பிடித்திருப்பதாய்.!

இறுக்கி அனைத்தபடி நானும் சொன்னேன்
என்றும் தோற்கவே விரும்புவதாய்...


வியப்போடு கேட்டாய்...
என்ன! என்றும் தோற்க வேண்டுமா?

ம்ம்ம்... உன் இந்த அணைப்பிற்காய்
என்றுமே தோற்கலாம்...

ச்சீய் போடா
சினுங்கினாய் சில்லறையாய்...
கையேந்தி நின்றேன்...

என்ன? என்றாய்...

சேகரித்தேன் உன் சினுங்கல்களை
மருதானிக்கு மருதானி வைக்கவென்றேன்...

என்னைப் பேசியே கொல்லாதேடா என்றாய்
காதைப் பொத்தியவாறு...

என்கையையும் கொடுத்தேன் காதைப் பொத்த...

கைபட்ட கணத்தில் சிலிர்த்து நின்றாய்
காதலைக் கண்ணோடு கொடுத்து நின்றாய்
மூச்சினை வேகமாய் இழுத்து விட்டாய் - உன்னுள்
மூழ்கவும் வைத்தெனை தவிக்க வைத்தாய்

இமைகள் துடிக்காமல் உனை பார்த்து
இதழைக் கொடுக்கவா என கேட்க
இதய படபடப்பிலுன் உடல் நடுங்க

இதுவே போதுமென நான் விலக
இழுத்தாயுன் பிடியுள் இமைப்பொழுதில்
அழுத்திக் கொடுத்தாய் நீ முத்தம் மறுநொடியில்

இதயத்தின் படபடப்பும் உடலின் சிலுசிலுப்பும்
அடங்கி இருந்தது உன்னுள்
தொடங்கி இருந்தது என்னுள்...

சிலிர்த்து நின்ற என்னைக் கண்டு
சிரித்து நின்றாய்...
மீண்டும் தோற்றாயா என்னிடமென்று.!

சொல்லத்தான் நினைக்கிறேன்
இப்பொழுதும் நான்...
என்றும் தோற்கவே வேண்டுமென்று.!

மழை

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
வானம் தான் பொத்தல் ஆனதோ - இல்லை
மேகம் தான் பொங்கி வந்ததோ...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
இடிச்சத்தம் காதைப் பிளக்குதே - தாய்
மடிதேட என்னைத் தூண்டுதே...


என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
மின்னல் வந்து வின்னை வெட்டுதே - இதை
கண்ணில் பார்க்க வழியுமில்லையே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
மண் வாசம் தேடி வந்ததே - என்னை
பெண்வாசம் தேட வைக்குதே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
அனல் காற்றும் தென்றல் ஆனதே - எந்தன்
மனம் இன்று ஊஞ்சல் ஆடுதே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
வானம் தான் பொத்தல் ஆனதோ - இல்லை
மேகம் தான் பொங்கி வந்ததோ...

இணையப் போலிகள்

இணையத்தில் நான்தான்
வாடிக்கை இன்று

தெரிந்தவர் ஒருவரின்
பலவீனம் காண
தெரிந்தவர் ஒருவரால்
வேடிக்கையாய் பிறப்பேன்…

அன்பான பேச்சால்
சுவையான சிரிப்பால்
வளர்ந்தே நாளும்
வசியமாய் மாறுவேன்…

தேனில் விழுந்த ஈயாய் அவரும்
என்னுள் விழுந்து வெளிவர வாட
இழந்த சுயத்தை என்னுள் தேட
இளிப்பேன் நானும் வஞ்சக னாக…

எனக்கென சொல்லும்
எனக்கென உணர்வும்
நானா கேட்டேன்
தானாய் கொடுத்தார்…

இன்பமாய் நானும் வாழ்ந்திட இன்று
துரத்திட நினைத்தால் விடுவனோ நானும்
என்னையும் அழிப்பேன் எந்தையும் அழிப்பேன்
என்னை அழித்திட நினைக்கையில் நானும்…

வெண்பாக்கள் சில

சொல்லில் வன்மையையும் சிந்தைத் தெளிவினையும்
அள்ளித் தருவாளே அட்சயப் பாத்திரமாய்
கல்விக்கு அதிபதியாம் எங்கள் கலைமகளை
உள்ளில் நினைத்து விட.


இன்பம் எதுவென்று தேடியே வாழ்க்கையின்
இன்பப் பொழுதுகளை வீன்செய்து வாழத்
திரும்புமோ இன்பப் பொழுதும் அதனால்
இருத்தலில் இன்பம் அடை.


எண்ணும் எழுத்தும் என்னுள் விதைத்து-நல்
எண்ணம் வளர்த்திவ் வுலகோர் வியந்திட
என்னையும் ஆக்கிய என்குரு அன்பினை
எண்ணிடும் நன்னாள்;இன் று.


பரியும் கரியும் உறுமும் களத்தில்
பயந்து நடுங்கி பதுங்கி நுழைந்து
இறந்த உடலின் சிரத்தைப் பறித்தே
இறைபவன் வீரனோ சொல்.

கிறுக்கல்கள் இரண்டு

கற்பு:

கற்போடே வாழ்கிறேன்.!
உறவாடும் பொழுதில்
இன்னொருவனை நினையாமல்...
பணத்திற்காய் மட்டுமே பாயை விரித்தாலும்
நான்...
பத்தினியாய் வாழும் பலர்???


பெயரில்லாதது
:

எதிர்காலமே நீயென்றிருந்ததால்.!
எதிர்காலத்தின் பயம்
இருந்ததில்லை என்றும்
உன்நிழலில் இருந்த பொழுதுகளில்...