Wednesday, April 21, 2010

கிறுக்கல் - 38




















அம்மா அம்மாவென
அழுத குழந்தை
அமைதியாக உறங்குகிறாள்
தூளியில் ஆடியே
புடவையில் நுகர்ந்தபடி
அம்மாவின் வாசம்...

Tuesday, April 20, 2010

கிறுக்கல் - 37



மூன்று நாளாய் தவிக்க வைத்த

முகம் மறந்த

முன்னாள் காதலி நினைவு

முடிவுக்கு வந்தது

தினசரியில் அவளின்

மௌன அஞ்சலி அறிவிப்பு...

Tuesday, April 6, 2010

கிறுக்கல் - 36




















பார்வையால் கதைகள் பேசி
பழக்கத்தால் உணர்வுகள் ஒன்றி
பாழும் சூழ்நிலைச் சுருக்கால்
பேசியே பிரிந்த போது

கால் நழுவா பூமிபந்தும்
உணராத உயிரின் வலியும்
உணர்ந்தேன் இன்றுநான் - பார்த்ததால்
பலவருடம் கடந்து அவளை...

Monday, April 5, 2010

கிறுக்கல் - 35




















திரும்பாது எனநினைத்து
சிந்திக்க மணமில்லாமல்
திருந்தவும் மணமில்லாமல்
ஆற்றுநீரில் எரியும்கல்லாய்
விளையாட்டாய் விட்டெறிய
வினைவந்து தழுவும்நேரம்
விசனப்பட்டு உணர்கிறேன்
வீரியமானவைதான் வார்த்தைகள்...

Saturday, April 3, 2010

கிறுக்கல் - 34

















நான்நடந்த பாதையெங்கும்
பலவாறாய் எனைக்காட்டி
என்னுள்ளே வீற்றிருக்கும்
உயிர்துடிப்பாய் தொடர்ந்திட்டாய்
நிலவணைத்த பகலவனாய்
எனைவந்து இருளணைக்க
எங்கேநீ மறைந்தனையோ
உடன்வந்த எந்நிழலே...