அம்மா அம்மாவென
அழுத குழந்தை
அமைதியாக உறங்குகிறாள்
தூளியில் ஆடியே
புடவையில் நுகர்ந்தபடி
அம்மாவின் வாசம்...
சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
மூன்று நாளாய் தவிக்க வைத்த
முகம் மறந்த
முன்னாள் காதலி நினைவு
முடிவுக்கு வந்தது
தினசரியில் அவளின்
மௌன அஞ்சலி அறிவிப்பு...