அம்மா வலியில் துடியாய் துடிக்க
அப்பா அவஸ்தையில் நடையாய் நடக்க
இனியும் தாய்க்குப் பாரம் வேண்டாம்
என்றே எண்ணித் தரையை நீதொட்ட
நாளாம் இன்று நண்பா உனக்கு
துன்பம் வாழ்வில் மலையாய் வரினும்
துனிவை கொண்டு பனிபோல் ஆக்கி
இன்புற்று நீயும் பல்லாண்டு வாழ
இறைவனை வேண்டும் நண்பன் எனது
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து….
சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Monday, December 28, 2009
Saturday, December 26, 2009
பெயரில்லாதது
அழுக்கால் நிறைந்த உடல்
அழுக்கை இழந்த பின்னே
அரிப்பால் அவதி படும்
குற்றங்கள் நிறைந்த உள்ளம்
குற்றத்தை நிறுத்திய பின்னே
குறுகுறுப்பால் அவதி படும்.
அரிப்புக்கு பயந்து
அழுக்குடன் வாழ்ந்தால் – யாரும்
அருகே வரமாட்டார்.
குறுகுறுப்புக்கு பயந்து
குற்றத்துடன் வாழ்ந்தால் – உனது
சுற்றமும் வரமாட்டார்.
அழுக்கை இழந்த பின்னே
அரிப்பால் அவதி படும்
குற்றங்கள் நிறைந்த உள்ளம்
குற்றத்தை நிறுத்திய பின்னே
குறுகுறுப்பால் அவதி படும்.
அரிப்புக்கு பயந்து
அழுக்குடன் வாழ்ந்தால் – யாரும்
அருகே வரமாட்டார்.
குறுகுறுப்புக்கு பயந்து
குற்றத்துடன் வாழ்ந்தால் – உனது
சுற்றமும் வரமாட்டார்.
குழுமம்-வெண்பா
முகமறியா மக்கள் பலரைநட் பென்னும்
முகத்தால் இணைக்கும் குழுமம் தனிலே
அகமாய் அமையும் எழுத்தாம் அதனை
நயமாய் அமைத்தல் நலம்.
முகத்தால் இணைக்கும் குழுமம் தனிலே
அகமாய் அமையும் எழுத்தாம் அதனை
நயமாய் அமைத்தல் நலம்.
Thursday, December 24, 2009
தாயே வரமருள்வாயே
தண்ணீர் குடத்தினின்று
தரையிலே கால்பதிக்க
தன்னுயிரை பனயம்வைத்து
என்னுயிரை அளித்தவளே
உயிர்கொடுத்த அசதிவிலகி
உணர்வது திரும்பியதும்
உள்ளங்கையில் அள்ளியெடுத்து
உச்சந்தலை முகர்ந்தவளே
உள்ளங்கை சிலிர்ப்பினிலே
உம்மென்று சினுங்கியதும்
உதிரத்தை பாலாக்கி
உணவாகத் தந்தவளே
உணவுன்னும் வேளையிலோ
உடைமாற்றும் வேளையிலோ
உறங்குகின்ற வேளையிலோ
உறக்கத்தில் நான்சினுங்க
உள்ளமது பதறிநீயும்
உடனென்னை பார்த்தவளே
தவழ்ந்துநானும் வந்தபோதும்
தத்திதத்தி நடந்தபோதும்
தவறிவிழ நேரும்பொது
தாங்கியெனைப் பிடித்தவளே
பல்லில்லா வாய்தனிலே
பேசச்செய்த முயற்சியதை
பாடல்நானும் பாடுவதாய்
பார்ப்பவர்க்கு உரைத்தவளே
பாடமது படிப்பதற்கு
பள்ளிக்குச் சென்றுவந்து
பலகதைகள் நான்சொல்ல
பணிவிடுத்து கேட்டவளே
விழாகால கூட்டத்திலே
வீதியிலே நடக்கும்போதும்
வழிதவறி போகாவன்னம்
விரல்பிடித்து சென்றவளே
நடந்துபோன நாட்களிலும்
நடக்கின்ற நாட்களிலும்
வாழ்த்ததனை சொல்லியென்னை
வழிகாட்டி நடத்தியவளே
வாழும்காலம் எல்லாமெனக்காய்
வாழ்ந்துவந்த அன்புத்தாயே
வாரிசாக நீயேயெனக்கு
பிறந்திடவோர் வரமருள்வாயே…
தரையிலே கால்பதிக்க
தன்னுயிரை பனயம்வைத்து
என்னுயிரை அளித்தவளே
உயிர்கொடுத்த அசதிவிலகி
உணர்வது திரும்பியதும்
உள்ளங்கையில் அள்ளியெடுத்து
உச்சந்தலை முகர்ந்தவளே
உள்ளங்கை சிலிர்ப்பினிலே
உம்மென்று சினுங்கியதும்
உதிரத்தை பாலாக்கி
உணவாகத் தந்தவளே
உணவுன்னும் வேளையிலோ
உடைமாற்றும் வேளையிலோ
உறங்குகின்ற வேளையிலோ
உறக்கத்தில் நான்சினுங்க
உள்ளமது பதறிநீயும்
உடனென்னை பார்த்தவளே
தவழ்ந்துநானும் வந்தபோதும்
தத்திதத்தி நடந்தபோதும்
தவறிவிழ நேரும்பொது
தாங்கியெனைப் பிடித்தவளே
பல்லில்லா வாய்தனிலே
பேசச்செய்த முயற்சியதை
பாடல்நானும் பாடுவதாய்
பார்ப்பவர்க்கு உரைத்தவளே
பாடமது படிப்பதற்கு
பள்ளிக்குச் சென்றுவந்து
பலகதைகள் நான்சொல்ல
பணிவிடுத்து கேட்டவளே
விழாகால கூட்டத்திலே
வீதியிலே நடக்கும்போதும்
வழிதவறி போகாவன்னம்
விரல்பிடித்து சென்றவளே
நடந்துபோன நாட்களிலும்
நடக்கின்ற நாட்களிலும்
வாழ்த்ததனை சொல்லியென்னை
வழிகாட்டி நடத்தியவளே
வாழும்காலம் எல்லாமெனக்காய்
வாழ்ந்துவந்த அன்புத்தாயே
வாரிசாக நீயேயெனக்கு
பிறந்திடவோர் வரமருள்வாயே…
Wednesday, December 23, 2009
காதல் கிறுக்கல்
சூரியனைச் சுற்றும் பூமியாய்
உன்னைச் சுற்றும் நான்
பூமியைச் சுற்றும் நிலவாய்
என்னைச் சுற்றும் அவள்
ஒன்றை விரும்பும் மற்றொன்றாய்
என்றும் இணையா கோள்களாய்…
பார்ப்பவர் பார்வைக்கு
இரவில் பூமியின்
ஒருபாதியில் மறைந்தாலும்
மறுபாதியில் ஒளிவீசும்
பகலவனாய் என்றும்
என்(னில்)னுள் ஒளிவீசும் நீ…
உன்னைச் சுற்றும் நான்
பூமியைச் சுற்றும் நிலவாய்
என்னைச் சுற்றும் அவள்
ஒன்றை விரும்பும் மற்றொன்றாய்
என்றும் இணையா கோள்களாய்…
பார்ப்பவர் பார்வைக்கு
இரவில் பூமியின்
ஒருபாதியில் மறைந்தாலும்
மறுபாதியில் ஒளிவீசும்
பகலவனாய் என்றும்
என்(னில்)னுள் ஒளிவீசும் நீ…
Tuesday, December 22, 2009
எங்கிருந்தாலும் வாழ்க
உன்னைக் கரம்பிடிப்பேன் அன்றேல் உயிரிழப்பேன்
என்றே சிரமடித் துன்மேல் உறுதியிட்ட
மங்கை மணவோலை தந்தபின்னும் காதல்
மனதாரச் சொல்லிடும் வாழ்த்து.
என்றே சிரமடித் துன்மேல் உறுதியிட்ட
மங்கை மணவோலை தந்தபின்னும் காதல்
மனதாரச் சொல்லிடும் வாழ்த்து.
Tuesday, December 15, 2009
புகைப்படமும் வெண்பாவும்
பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
சமாதானம்
(அ)
பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
அமைதி…
சிறகை விரித்து கரத்தை விடுத்து
பறக்க விழையும் புறா.
கரத்தில் பிடித்து அடைத்தப் பிறகும்
சிரத்தை உடனே சமயத்தைப் பார்த்து
சிறகை விரித்து சிறையை உடைத்து
பறக்க முயலும் புறா.
Sunday, December 13, 2009
எனது வெண்பாக்கள்
அன்டத்தை காண்பித்து நம்மோடு வாழ்கின்ற
அன்புரு கொண்டவள் தாய்.
பிறப்பின் விதையை அளித்துபுவிக் குன்னைச்
சிறப்பித்த தெய்வம் பிதா.
அறியாமை நீக்கி அழியாதச் சொத்தாய்
அறிவை அளிப்போர் குரு.
விவேகம் இருந்தால் ஒழிய விரயமாகு
மன்றோ செயலில்வே கம்.
அன்புரு கொண்டவள் தாய்.
பிறப்பின் விதையை அளித்துபுவிக் குன்னைச்
சிறப்பித்த தெய்வம் பிதா.
அறியாமை நீக்கி அழியாதச் சொத்தாய்
அறிவை அளிப்போர் குரு.
விவேகம் இருந்தால் ஒழிய விரயமாகு
மன்றோ செயலில்வே கம்.
Tuesday, December 8, 2009
பரத்தை
கண்ணிற்கு மையால்
கருப்பு கலரடித்து
உதட்டுக்கு லேசாய்
சிவப்பு சாயமிட்டு
முகத்தினை முழுவதும்
ஒப்பனையால் நிரப்பியே
அழகாய் மினுக்கும்
ஆடையை உடுத்தி
விழியால் கனைகளை
வீதியிலே தினம்வீசி
மானம் இழந்து
வாழ்க்கை நடத்தி
பகலில் ஓய்வெடுத்து
அடுத்த இரவிலும்
ஆட்டம் போட
அழகுப்படுத்தும்
மங்கையிவள்
வாழ்க்கைப் போராட்டத்தில்
விளக்கில் விழும்
விட்டில் பூச்சியா அல்ல
சுட்டெரிக்கும் சூரியனைத்
தொட்டுவிட முயலுகின்ற
பீனிக்ஸ் பறவையா…
கருப்பு கலரடித்து
உதட்டுக்கு லேசாய்
சிவப்பு சாயமிட்டு
முகத்தினை முழுவதும்
ஒப்பனையால் நிரப்பியே
அழகாய் மினுக்கும்
ஆடையை உடுத்தி
விழியால் கனைகளை
வீதியிலே தினம்வீசி
மானம் இழந்து
வாழ்க்கை நடத்தி
பகலில் ஓய்வெடுத்து
அடுத்த இரவிலும்
ஆட்டம் போட
அழகுப்படுத்தும்
மங்கையிவள்
வாழ்க்கைப் போராட்டத்தில்
விளக்கில் விழும்
விட்டில் பூச்சியா அல்ல
சுட்டெரிக்கும் சூரியனைத்
தொட்டுவிட முயலுகின்ற
பீனிக்ஸ் பறவையா…
Sunday, December 6, 2009
கவிஞன்
புள்ளிகளைக் கோர்த்து எழுத்தாக்கி
எழுத்துக்களைக் கோர்த்து சொற்களாக்கி
சொல்லைக் கோர்த்து வரியாக்கி
வரிகளைக் கோர்த்து கவிதையாக்க
புள்ளியைப் புதிதுபுதிதாய்த் தேடுபவன்…
எழுத்துக்களைக் கோர்த்து சொற்களாக்கி
சொல்லைக் கோர்த்து வரியாக்கி
வரிகளைக் கோர்த்து கவிதையாக்க
புள்ளியைப் புதிதுபுதிதாய்த் தேடுபவன்…
கிறுக்கல்
விதையாய் சேற்றில்
விதைத்தவனை விடுத்து
நாற்றாய் ஈன்ற
நிலத்தையும் விடுத்து
பயிராய் வாழ்ந்த
புதுவயலையும் விடுத்து
மகசூல் தந்து
மரித்த பயிராய்
மகவை ஈன்றதும்
மரித்த தாய்…
விதைத்தவனை விடுத்து
நாற்றாய் ஈன்ற
நிலத்தையும் விடுத்து
பயிராய் வாழ்ந்த
புதுவயலையும் விடுத்து
மகசூல் தந்து
மரித்த பயிராய்
மகவை ஈன்றதும்
மரித்த தாய்…
Subscribe to:
Posts (Atom)