சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, November 19, 2010
கிறுக்கல் - 53
Tuesday, November 16, 2010
தாய்-ஹைக்கூ குறள்கள்
சுமைகருதா(து) ஈரைந்து மாதம் இமைபோல்
சுகமாய்க் கருவைக்காப் பாள்.
அகத்தில் சுமந்த வலியை மறப்பாள்
மகவது மண்தொடக் கண்டு.
பசிக்கும் குழந்தை ருசிக்கத் தருவாள்
ரசித்து முலைப்பால் உணவு.
நாவால் உணவை வெளித்தள்ளும் பிள்ளைக்குப்
பாங்காய் படைப்பாள் உணவு.
மழலை மொழியை உலகினர் மெச்ச
பலமொழி என்பாள் புகழ்ந்து.
தவழும் குழந்தை நடந்திடச் செய்யும்
தவத்தினில் தன்னைமறப் பாள்.
நடைபயிலும் பிள்ளை நடந்திட தானும்
நடைபயில்வாள் பிள்ளை உடன்.
ஓடித் தொடவரும் பிள்ளை சிரித்திட
ஓடியும் தோற்பாள் அவள்.
பாடம் பயிலும் குழந்தை மொழிந்திட
பாடம் பயில்வாள் அவள்.
தோல்வியில் பிள்ளை துவண்டு விழுந்திட
தோள்தரு வாள்விழுதாய் தாய்.
கிறுக்கல் - 52
Monday, November 15, 2010
வரிகள் மாற்றப்பட்டது - சின்னம்மா கல்யாணம்(அபியும் நானும்)
எங்கக்கா கல்யாணம் நேரமில்ல நேரில்வர
எங்கக்கா கல்யாணம் நேரமில்ல நேரில் வர
கண்டிடஇரு கண்ணிருந்தும்
கண்டிடவோர் வழியும் இல்ல
கணினியில கண்ணை வைச்சு
பார்த்திடவும் வசதியில்லை
உடலால இல்லையுன்னு
உதறாதே என் வாழ்த்தை
மனசார வாழ்த்திடுறேன்
பல்லாண்டு நீ வாழு
கிறுக்கல் - 51
பின்னொரு நாளில்
எனது சேமிப்பெல்லாம் கரைந்து
சுயத்தை இழந்து
சுயமாக வாழ்வை முடிக்க விரும்பும் தருணம்
என்னால் இன்று
தற்கொலயால் காக்கப்பட்ட ஒருவன் சொல்லலாம்
தற்கொலை தவறென்று...
கிறுக்கல் - 50
எதையோ
தேடித் தேடி அலைந்தேன்
ஊருக்குள் பேசிக்கொண்டனர்
நான் தொட்டதெல்லாம் வென்றவனென்று
இருந்தும் நான்
இன்னும் எதையோ தேடுகின்றேன்
தேடல் இன்னதென்று புரியாமல்
என் தேவை இன்னதென்று புரியாமல்...