பிள்ளையை நாடுகிறேன்...
பிரச்சினையை கதையாய்ச் சொல்ல.!
முடிவில்லா கதையை
முடிக்காமல் நிறுத்த
அனாயசமாய் முடித்துத் தருகிறாள்...
கதையையும் எனது பிரச்சினைகளையும்.!
சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
ஏனிந்த பிறவியோ முருகா – என்னை
எதற்காக படைத்தாயோ முருகா
என்செய்தேன் பாவங்கள் முருகா – மீண்டும்
பிறவாமல் இருக்கவே வழியேது முருகா
பிறப்பதனைத் தந்தாலும் முருகா – உன்னை
பிரியாத வரம்வேண்டும் என்வாழ்வில் முருகா
குறையில்லா உடல்வேண்டாம் முருகா – சிறுகுறை
ஒன்றை நான்கேட்பேன் அதுவேண்டும் முருகா
குறையென்றால் குறையில்லை முருகா – நோயாம்
பசியாக்கும் வயிறில்லா உடல்வேண்டும் முருகா
உண்ணாமல் இருந்தாலும் முருகா – உன்னெண்ணத்தால்
உடல்வாட்டம் இல்லாமை வேண்டுமென் முருகா…
உயிராலும் உணர்வாலும் முருகா – உன்பேரை
மறவாத நிலைவேண்டும் முருகா
உலகைநான் பிரிந்திடினும் முருகா – உன்பதமலராய்
பூஜிக்கும் நிலைவேண்டும் முருகா…