Friday, July 22, 2011

சமாதானம்

அப்பப்பா இது ஆகாதப்பா
அழுகையை நீ கொஞ்சம் குறைச்சிடப்பா
பந்துண்டு கலர் பலூனுண்டு
கீகொடுத்தால் ஓட காருண்டு

பார்முழுக்க நீ பவனிவர
யானையாக இங்கு நானுமுண்டு
பாலுண்டு இனிக்கும் தேனுண்டு
படுத்துறங்க ஆடும் தூளியுண்டு

கலகலப்பாய் பல கதைகள்சொல்ல
காவலனாய் இங்கு நானுமுண்டு
எதுவேண்டும் அதைக் கேட்டிடப்பா
அரற்றுவதை நீ நிறுத்திடப்பா

எனைவிடுத்து நீ எங்கேயோ
எதைக்கண்டு நீ சிரிக்குறியோ
அஹ்ஹஹ்ஹா வந்துவிட்டாள் – உன்
அன்னை தரிசனம் தந்துவிட்டாள்

வித்தைகள் பலது நான்புரிஞ்சும்
வீம்பாய் அழுது அரற்றியநீ
வாசலில் அன்னையைக் கண்டவுடன் – பொக்கை
வாயினில் சிரிப்பது விந்தையப்பா…

3 comments:

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

கவிதை நன்று பிரசாத்:)!

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

Post a Comment