அப்பப்பா இது ஆகாதப்பா
அழுகையை நீ கொஞ்சம் குறைச்சிடப்பா
பந்துண்டு கலர் பலூனுண்டு
கீகொடுத்தால் ஓட காருண்டு
பார்முழுக்க நீ பவனிவர
யானையாக இங்கு நானுமுண்டு
பாலுண்டு இனிக்கும் தேனுண்டு
படுத்துறங்க ஆடும் தூளியுண்டு
கலகலப்பாய் பல கதைகள்சொல்ல
காவலனாய் இங்கு நானுமுண்டு
எதுவேண்டும் அதைக் கேட்டிடப்பா
அரற்றுவதை நீ நிறுத்திடப்பா
எனைவிடுத்து நீ எங்கேயோ
எதைக்கண்டு நீ சிரிக்குறியோ
அஹ்ஹஹ்ஹா வந்துவிட்டாள் – உன்
அன்னை தரிசனம் தந்துவிட்டாள்
வித்தைகள் பலது நான்புரிஞ்சும்
வீம்பாய் அழுது அரற்றியநீ
வாசலில் அன்னையைக் கண்டவுடன் – பொக்கை
வாயினில் சிரிப்பது விந்தையப்பா…
3 comments:
கவிதை நன்று பிரசாத்:)!
நன்றி அக்கா...
Post a Comment