சல சல காகித சத்தம்
சாந்தமாய் கைகள் பேசும்
சிந்திக்கும் நேரம் யாவும்
சீராய்க் காலடிக் கேட்கும்
சுற்றிடும் ஆசிரியர் கண்டு
சூடாகி மூளை குழம்ப
செவ்வனே படித்தவர் எழுத
சேட்டைகள் செய்திட்ட நானோ
சைகையில் காலம் கடத்தி
சொந்தமாய் எழுதிட தெரியா
சோகமாய் இருப்பதைக் கண்டு
சொக்கியக் குறைவோ என்றே
ஆசிரியர் என்னைக் கேட்க
அடங்கனா சிரிப்பால் வகுப்பே
சிரித்திட்ட நாளை எண்ண
சிரிக்கிறேன் இன்றும் நானே… J