சுட்டெரிக்கும் சூரியனை சுகந்தமான சந்திரனை
விட்டெரியும் வின்மீனை வீசுகின்ற வாயு(காற்று)மதை
அகத்துள்ளே கொண்டிட்டே ஆடையாக மேகத்தையே
அணிந்திட்டே அண்டமெல்லாம் விரிந்திருக்கும் வானமகள்…
வெம்மையின் புழுக்கமதும் கடுங்குளிரின் நடுக்கமதும்
எரிகல்லின் தாக்கமதும் பெருமழையின் வெள்ளமதும்
தன்னாலே நேர்ந்ததென தாக்குகின்ற மக்கள்வசை
தன்னகத்தே உடையவர்க்காய் தாங்குகின்ற தாயுமவள்…
No comments:
Post a Comment