Monday, February 15, 2010

கிறுக்கல் - 9 (முன்னாள் ஆசிரியரிடம் ஒரு மாணவனின் புலம்பல்)

பள்ளிக்கால நாட்களிலே ஐயா
படிக்கத்தான் சொன்னீர்கள் என்னை
வகுப்பதனில் தினந்தோறும் ஐயா
வசைபாடி திருத்தமுனைந்தீர் என்னை

விளையாட்டாய் எடுத்தெறிந்தே ஐயா
வீனாக காலங்கழித்தேன் நானும்
நண்பர்களிடம் உங்களையும் ஐயா
நகைச்சுவையாய் கேலிசெய்தேன் நானும்

பள்ளியிலே படித்தவொரு நண்பன்
பட்டம்பெற்று உயர்பதவி சென்றான்
பார்க்கச்சென்ற என்னையுமே அவனும்
பாராமல் துரத்திடவே துடித்தேன்

அறிவுரைகள் அனைத்தையுமே ஐயா
அனாவசியமாய் தள்ளினேனே நானும்
அன்பான உம்வார்த்தை அனைத்தும்
அனுபவத்தில் சிறந்ததென உணர்ந்தேன்

No comments:

Post a Comment