நினைவு தெரிந்த நாள் முதலாய்
நினைவாய் எனக்கு இருப்பவனே
தோல்வியில் நான் துவளும் போது
தோல்வியைத் தோற்கடிப்பாய் என்றவனே
உறவுகள் அனைத்தும் வெறுத்த போதும்
உறவாய் எனக்கு இருப்பவனே
நம்பிக்கை நானும் இழக்கும் நேரம்
நம்பிக்கை வார்த்தை அளிப்பவனே
வாழ்க்கையில் நான் இழந்தவை யாவும்
வாழ்க்கையாய் உன்னில் கிடைக்குமென்றே
காதலைச் சொன்னேன், உணர்ந்தே நீயும்
காதலைச் சொல்லி வாழ்வளிப்பாயே…
No comments:
Post a Comment