Saturday, November 28, 2009

திரும்பி பார்க்கிறேன்

1. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எதைப் பற்றியும்
கவலை இல்லா
என்னுள் தொலைத்த
கடந்த காலத்தை
திரும்பி பார்க்கிறேன் …
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
அம்மாவின் கைவிடுத்து
அழுதழுது கண்சிவந்து
அப்பாவின் சைக்கிளிலே
பள்ளிக்கு போன அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
சளி ஒழுகும் மூக்கோடும்
புண் நிறைந்த கையோடும்
பொத்தல் விழுந்த நிக்கரோடும்
பள்ளிக்கு சென்ற அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறையின் வாசலிலே
தொங்குகின்ற நெல்லிக்காயை
தொட்டாலே அபராதம்,
அறிவிப்பைக் கேட்டுவிட்டு
தொட்டால் ; தானேயென்று
நண்பர்களுடன் ஓடிவந்து
எக்கி்எக்கி தலையில் முட்டி
நெல்லியை சுவைத்த அந்த
சொர்க்கத்தை திரும்பி பார்க்கிறேன்…

2. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஆரம்ப பள்ளியிலே
அடிவைத்த நாட்களை நான்
அசை போட்டு மெதுவாக
திரும்பி பார்க்கிறேன்

புத்தகத்தை மறந்த நாளில்
அப்பாட ஆசிரியர்
விடுப்பிலே இருக்க வேண்டும்
இறைவனே என்று வேண்டி
பயந்து பயந்து காத்திருந்து
ஆசிரியர் வராவிட்டால்
ஆண்டவனுக்கு நன்றி சொல்லி
ஆசிரியர் வந்திருந்தால்
ஆண்டவனை திட்டி தீர்த்த
பழைய நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை மாலைவேளை
உடற்பயிற்சி வகுப்பதனில்
வில்லாக உடலை வளைத்து
வியர்வை வர பயிற்சியதை
செய்திடவே வேண்டுமென்று
பிரம்போடு சுற்றி வரும்
ஆசானை திட்டி தீர்த்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை வகுப்பு முடித்து
வீட்டிற்கு திரும்பும் நேரம்
ஊரிலுள்ள பாட்டி அவள்
வீட்டிற்கு வர வேண்டி
வருகின்ற பாதை முழுதும்
அடி மீது அடி வைத்து
நடந்து வந்த அந்நாளை
திரும்பி பார்க்கிறேன்...


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்

3. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எனது இவ்வாழ்க்கையில்
நண்பனுக்கு நான் இழைத்த
முதல் துரோக செயலதனை
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்


மூன்றாவது வகுப்பு முடிய
மூன்று வாரம் இருக்கும்போது
ஆண்டு விழா பற்றியொரு
அறிவிப்பு பள்ளியிலே
இயல்தமிழுக்காய் கட்டுரைப் போட்டி
இசைத்தமிழுக்காய் கவிப்போட்டி
நாடகத்தமிழுக்காய் நாடக போட்டி
விருப்பமுள்ள மாணவர்கள்
விளையாட்டுத் திடலிலே
விரைந்து வந்து பெயர் தருக…


எனதருமை நண்பனவன்
நாடகத்தில் நடிக்க எண்ணி
பெயர் கொடுத்தான் போட்டிக்கு
நாடகத்தின் பெயரதுவோ
பாஞ்சாலி சூளுரைப்பு
என் நண்பன் ஏற்றதுவோ
துரியனின் தம்பி வேடம்
அவன் நடிக்க வேண்டியதோ
இரண்டு பத்தி வசனமும்
துகிலுரியும் படலமும்


ஆரம்பமானதுவே
போட்டிகளின் ஒத்திகைகள்
எனக்கதுவோ வகுப்புகளை
தட்டிக் கழிக்கும் புதுஉத்திகள்
ஆன்டு விழா நாளிற்கு
தூரமோ அதிகம் இல்லை
நண்பனவன் மன்டைக்கு
வசனங்களோ தங்கவில்லை
நாடகத்தின் பொறுப்பாசிரியர்
நண்பனை அருகில அழைத்து
வசனத்தை உன் நண்பனிடம்
மனனம் செய்து ஒப்புவியென்றார்…


நாளெல்லாம் என்னை அமர்த்தி
வசனத்தை ஒப்ப கேட்டு
விளையாட்டாய் ஒருநாள் மாலை
வசனத்தை பேசிக் காட்டி
இதற்கு ஏன் இப்படி திக்குற
என்று நான் கேலிபேச
பின்னால் இருந்த பொறுப்பாசிரியர்
நாளை முதல் நடிக்கநீயே
ஒத்திகைக்கு வந்திடு என்ற
கட்டளையை இட்டு சென்றார்….


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்…

4. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
பிறந்த தேதி
மாறிப்போக
காரணமான
இரண்டாம் பள்ளியின்
இனிய பொழுதை
திரும்பி பார்க்கிறேன்

நான்கு வருடம் ஓடிஆடிய
பள்ளியை விடுத்து
வேறோர் பள்ளி
புதிய ஆசிரியர்கள்
புதிய நண்பர்கள்
எல்லாம் புதிதாய்
இருந்தும் துனிவாய்
வகுப்பில் நுழைந்த
முதல் முதல் நாளை
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பு முழுவதும்
பேச்சின் சத்தம்
பெசுவோர் பெயரை
எழுதும் ஒருவன்
நுழைந்ததும் கேட்டான்
யார் நீ என்று
நானும் கேட்டேன்
நீ யாரென்று

அவனோ சொன்னான்
வகுப்பின் தலைவன்
நானோ சொன்னேன்
புதிதாய்ச் சேர்ந்தவன்
வகுப்பில் நிற்க
அனுமதி இல்லை
இடத்தைப் பார்த்து
அமரு என்றான்

நிற்க அனுமதி
இல்லை என்றால்
நீயேன் நிற்கிறாய்
என்றேன் நானும்
பேசுவோர் பெயரை
எழுதும் பணியை
ஆசிரியர் தந்தார்
அதையே செய்கிறேன்
பேசாமல் அமர்ந்து
மனனச் செய்யுளை
மனனம் செய்வாய்
என்றான் அவனும்

நான்காம் வகுப்பின்
விடுமுறை நாளில்
மனனம் செய்த
செய்யுளை ஒபபி
என்ன செய்ய
என்றேன் நானும்
ஏதாவது செய் ஆனால்
அமைதியாய் செய்
என்றே சொல்லி
அவனும் அமர்ந்தான்

4 (2) திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பில்
ஓடி ஆடிய
என்னைப் பிரியா
பழைய நாட்களைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறைக்கு
செல்லும் முன்னே
பள்ளியின் வெளியே
இருக்கும் கடையிலே
வட்ட வட்ட
பிஸ்கேட் உடனே
சிறுசிறு அல்வா
துண்டுகள் வாங்கி
வகுப்பு இல்லா
நேரந்தனிலே
இரண்டு பிஸ்கேட்
நடுவில் கொஞ்சம்
அளவாய் அல்வா
தட்டி வைத்து
இனிப்பு பிஸ்கேட்
என்றே சொல்லி
அழகு காட்டி
உண்ட நாளைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
மதிய நேர
இடைவெளி போது
உணவு உண்ட
கின்னம் கழுவ
அருகே உள்ள
ஆற்று நீரில்
முட்டிக் கால்
முழுகி நின்று
கின்னம் கழுவி
முடித்த பின்னர்
கின்னம் மூடி
இரண்டையும் தனியே
ஆற்று நீரின்
எதிர்திசை எறிந்து
படகு வருது
என்றே சொல்லி
நீரில் ஆடிய
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பின்
ஆண்டுத் தேர்வில்
நண்பனுக்காக
தேர்வுத் தாளை
முன்னுக்கு தந்து
எழுதச் சொல்லி
என்னிடம் அத்தாள்
சேரும் வரையில்
வியர்த்து வழிந்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

Wednesday, November 25, 2009

முத்தம்

1. உன்னிதழென்ன
நெப்பந்திஸ்ஸா
தேனையளித்து
உயிருறுஞ்சுதே....


2. ரோஜாவை
முள்குத்தும்
அதிசயம்
என்றேன்

என்னவென்று
எப்போதும்போல்
தெரியாதவளாய்
முகம்வைத்தாய்

என்னிதழை
உன்னிதழில்
பொருத்தி
இதுதானென்றேன்

வெட்கத்தோடு
முள்ளையேற்க
ரோஜாவை
அழுத்தினாய்

மீன்டும்
ஆரம்பமானது
முடிவில்லா
முத்தப்போராட்டம்....

3. வில்லான புருவம்
வளைய
மொட்டான கண்கள்
மூட
குடையான நாசி
துடிக்க
இதழோடு இதழ்
சேர்த்து

அடுத்த நொடி
இல்லையென்று
அமுதுணவை கடைந்
தெடுக்கும்
மத்தான நாவின்
சுழலில்
பித்தானேன் முத்தக்
களிப்பில்….

4. அள்ள அள்ளக் குறையாமல்
அமுதை வழங்கும்
உன் இதழென்ன
அட்சயப்பாத்திரமா….

5. வரவும் செலவும் வைக்க
முத்தமென்ன வியாபாரமா
நேசத்தில் பகிர்ந் துண்ணும்
இதழின் சாறல்லவா…

6. என்னதான்
இதழின் சாறை
தொலைபேசி கொணர்ந்தாலும்
காதலின் சாறை
இதழில் பெற்றிடும்
இன்பம் கிடைத்திடுமா…

7. உச்சி முகர்ந்து
நெற்றியில் இட்ட
முத்தம்
உள்ளக் களிப்பில்
கன்னத்தில் இட்ட
முத்தம்
ஊடல் பொழுதில்
உதட்டில் இட்ட
முத்தம்
அசை போட்டு
கண் அயரும்
நேரம்
ஆர்வத்தோடு
அன்பே உன்னைக்
கேட்டேன்
உறங்கும் நேரம்
எங்கு இடுவாய்
முத்தம்

8. எத்தனை காலம்
ஆனால் என்ன
முத்தக் கடலில்
மறந்து விடுமா
கைகள் நடுங்க
இதயம் படபடக்க
கன்னி இதழிலிட்ட
கன்னி முத்தம்…

9. காதலெனும்
மடலின் பரிமாற்றத்திற்கு
முத்திரையாய்
முத்தப் பரிமாற்றம்…

10. கண்களை மூடி ஓர்
உணவுப் பரிமாற்றம்
அது காதலை திறந்திடும்
முத்தப் பரிமாற்றம்…

11. உமிழ்நீரும் அமிழ்தாகும்
இரகசியம்
நம்மிதழ்கள் இனைவதின்
அதிசயம்...

12. சொந்தங்கள் சூழ்ந்த போது
சந்தோஷம் தந்திடுமே
சத்தம் இன்றி மனைவிக்கு
தருகின்ற திருட்டு முத்தம்...

13. உணவில்
சர்க்கரை கூடாதென்று
சொல்லும் நீயே
உன்னை அறியாமல்
இனிப்பை தருகின்றாய்
இதழின் இரசமாய்...

14. தொண்டைக் குழி
காயும் முன்னர்
இதழில் முத்தமதை
தந்து நீயும்
சண்டை செய்வோம்
வாடி பெண்ணே
நம்மிதழ் இனைத்து
நாவால்
சண்டை செய்வோம்
வாடி பெண்ணே..

15. முத்தம் தர
வரும் போது
வெட்கப்பட்டு
தலை குனிவாய்
பிடிக்கவில்லை(யோ)
என்றே நான்
திரும்பியே
அடி வைத்தால்
முகம் திருப்பி
மெதுவாக
இதழோடு இதழ்
சேர்ப்பாய்
காரனம் நான்
கேட்டால்
களுக் கென்று
சிரித்திடுவாய்...
புரியாமல் தினம்
நானும்
படும் அவஸ்தை
இரசித்திடுவாய்...
புதிராக இருந்த
போதும்
உனைத் தேடி
வருகின்றேன்...
அமிழ்தான உன்
இதழை
ருசி பார்க்க
துடிக்கின்றேன்...

16. பிரியும் போதும்
பிரிய மனமின்றி
பெருமூச்சோடு பிரியும்
நம் இதழ்கள்
அடுத்த ஆட்டத்தின்
எதிர்பார்ப்போடு…

17. தன்னை மொத்தமாய்ப்
பகிரும் புதுத்தம்பதிகளின்
முதலிரவும் ஆரம்பமாகும்
சிறு முத்தத்தோடே...

18. அலுவலகம் முடித்து
அலுப்பாய் வந்தாலும்
அன்பு மகள்(ன்)
கையை ஏந்தி
தத்தி தத்தி
நடந்து வந்தால்
அன்பாய் தூக்கி
மடியில் இருத்தி
முத்தாய் இடும்
முத்தத்தாலே
குளிர்ச்சியின் சிலிர்ப்பில்
ஈரம் ஆக்கும்
இன்பத்திற்கே
ஈடுமுண்டோ …

19. சட்டென்று இட்டுவிட்டு
பட்டென்று எங்கு மறைய
உயிரே உன்னைவிட்டு !
அன்பே என்னை
ஆரத் தழுவி
இதழில் ரசத்தை
ஈந்த உன்னை
உறவின் முன்பும்
ஊரின் முன்பும்
என்னவள் ஆக்குவேன்
ஏன் உனக்கு
ஐயம் என்மேல் ?
ஒன்றாய் கலந்த
உன்னைவிட்டு
ஓடிடேன் நானும்:
உடலை விட்டு
உயிரே போனாலும்…

20. முத்தத்திற்கு மட்டுமா
முகவுரை
என் மொத்தத்திற்குந்தானே
மூச்சாய் நீ இருக்க
முட்டுமோ
உன் பொழிவுரை

21. அடி கள்ளி
என் மேல்
இவ்வளவு விருப்பமா
கன்னத்தில்
முத்தம் கேட்டால்
கடித்து சொல்கிறாய்
கட்டிக்கரும்பாய்
இனிக்குதென்று...
உனக்கு
இனிப்பென்றால்
இதோ எடுத்துக்கொள்
மிச்சமிருக்கும்
கன்னத்தையும்...
கண்ணே மறந்துவிடாதே
கடித்த இடத்தில்
முத்தமென்ற மருந்தைப் போட

22. தொட்டால் மலரும்
மலரென்கிறாய்
உன்னை,
தொட்டுவிட்டாலோ
முகத்தை மூடும்
தொட்டாசினுங்கி ஆகிறாய்...

23. இது உங்களதா ?
தவறாக எண்ண வேண்டாம்
உங்களுக்காய்
இருக்கும் இதழில்
மழைதான் தொட்டதோ
என்றே தான்
தள்ளி விட்டேன்
மழையாய் இதழில்
மறுபடி தொடரு
என் மனாளா...

24. அன்னியமென்று
சொல்லி அமிலத்தை
ஊற்றாதே
இதழின் அமிழ்தெடுக்க
வந்த என்னை
ஏமாற்றலாகாதே...
இதயத்தில்
உள்ளவளே,
பல மலரின்
தேன் உண்ணும்
வண்டாயெனை
பார்க்காதே...

25. சன்டியனாய்
இருந்த என்னை
சாதுவாக மாற்றிய நீயே
இதழின்
சாறெடுக்க இன்று
சன்டியன் ஆக்கி னாயே...

26. இப்பொழுது தான்
வந்தமர்ந்தாய்
என்னருகே
நிலவுக்கென்ன அவசரம்
அதற்குள் உனைக்காண...
இந்த பகலவனுக்கும்
நிலாமகளுக்கும்
நேரமும் தெரிவதில்லை
நம்மை
நெருங்கவும் விடுவதில்லை...

27. நீ மறவா
முதல் முத்தம்
பித்தனாக
என்னை மாற்றி
போனதடி பூமகளே
பித்தத்தை தெளியவேனும்
மிச்சத்தை கொடுத்தென்னை
மீட்டிடுவாய் என்னவளே...

28. கனவிலோ
இதழ் மழையால்
நனைத்தேன் என்கிறாய்
நேரிலோ
இதழ் தூறலே
தரவும் மறுக்கிறாய்...

29. அமிழ்தம் புளிக்குமா
அன்பே,
மகளின் முத்தம்
கிடைக்கப் பெறுவது
மழலையில் மட்டுமே
மானே உனது
இதழின் சுவையோ
மரிக்கும் வரையில்
பொய் கோபம் தவிர்த்து
வருவாய் தொடர்வோம்
புதிதாய் முத்தமழை…

30. நேற்றோடு முடிந்ததா
என் கணக்கு
பொய்யுரை ஏனோ
பெண்மானே
உன்னிலும் என்னை
நேசிப்போர்
எவரிங்கே…
கோபம் தவிர்த்து
இதழின் இரசம்
எனக்களிப்பாய்…
புதிதாய்
தொடர்வோம்
முத்த மழை…

31. முத்தமழை தொடர்ந்திடவே
விரைந்தென்னை வாவென்றாய்
ஓடியே வந்தெனக்கு
இதழால், ஒத்தடமளித்து
பிரிகின்ற பொழுதினிலே
பிசினாக நின்றவளே…
பிரியாமல் முத்தமழை
தொடர்ந்திடவோர் வழியுரைப்பாய்,
சொர்க்கத்தின் சுகமதனை
நில்லாமல் சுவைத்திடுவே…

32. சாகித்ய அகாதமி
சாதித்ததற்காயல்ல
வற்றாத உன்னிதழின்
சாகசத்தை ஊக்குவித்து
இன்னுமொரு சாகசத்தை
இனிதாகத் தொடங்கிடவே….

33. பிரிவிலே உறவு
வளருமேயானாலும்
இதழின் பிரிவிலே
இதயம் துடிக்கவே மறுக்குதே…

34. பள்ளியறைப் பாடத்திலே
முதல் பாட முத்தமதை
இட்டதுமே சூடானேன்
சூடாக சுகமளித்து
மூச்சிரைக்க பிரியும் நேரம்
நெற்றியிலே இட்ட முத்தம்
நெஞ்சமெல்லாம் நிற்குதைய்யா
அடுத்தவொரு பயணத்திற்கு
அது அடிக்கல்லும் இட்டதைய்யா
முடிவொன்று இல்லாத
முத்தமொரு விந்தையய்யா…

35. உன்னிதழில்
கவி எழுத
கம்பனும்
குழம்புவானே
எங்கு தொடங்க
எங்கு முடிக்க
உன் இதழைப்
பதித்து
கற்பிப்பாய்
இம்முத்தக்கலையை…

Thursday, November 19, 2009

காதல்-6

கற்பை மட்டும் கண்டால் காதல் தெரியாது
காதல் மட்டும் கண்டால் கைம்பெண் தெரியாது
கற்பு காதலில் மறையும் என்றும்
காதல் கற்பிலே மறையாது
காதல் தூய்மையை பார்க்கும் நெஞ்சம்
கற்பில் தூய்மையை பார்க்காது
காமக் கண்ணில் பார்த்தால் மாறும் காதல்தான்
காதல் கண்ணில் பார்த்தால் விதவையும் காதலிதான்
விதவையென்று ஆன உடனே வாழ்க்கை முடியாது
வீட்டினுள்ளே அடைந்து அவளும் வாழ்ந்திட கூடாது
விதவை சொல்லினை மாற்றிட முயலும்
மறு மணங்களோ தோற்காது
மக்கள் பேச்சால் பெண்கள் மறுமண
முடிவை மாற்றிட கூடாது
அன்பை மட்டும் பார்ப்பது தூயகாதல் தான்
தூயகாதல் வாழ்வின் அஸ்திவாரம் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் காம காதல்தான்
காதலிலே சிறந்ததிந்த கைம்பெண் காதல்தான்
கற்பை மட்டும் கண்டால் காதல் தெரியாது
காதல் மட்டும் கண்டால் கைம்பெண் தெரியாது

Monday, November 16, 2009

பாடல் – மாற்றப்பட்டது

ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
பெண் அவளை காதலியாய் பலபேர் நிணைத்துருக
நீயும் சென்று ஏன் விழுந்தாய் அவள் வலையில்
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
வேலை இல்லா காளையாக வீதியில் நீ இருக்க
நீயும் சென்று ஏன் விழுந்தாய் அவள் வலையில்
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
செல்போனே இல்லையென்று சிரிப்பாய் சிரித்து விட்டு
கோமாளி ஆக்கிச் சென்றாள் உன்னையடா
கோமாளி ஆன பின்னும் ஏமாளி என்ற போதும்
காதலில் நீ விழுந்த மூடனடா…
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
ஆராரோ ஆரோ ஆரிரரோ…. ஆராரோ ஆரோ ஆரிரரோ….

Sunday, November 8, 2009

ஜோடிப்புறா


என் னுடலை குடையாக்கி, உனக்கு
நிழலாய் கொடுத் தேனாம்-அறிவிலிகள்
நான் துவண்டு விழும் போது
தாங்கும் சுமைதாங்கி நீயென்று ணராமல்

Saturday, November 7, 2009

குழந்தாய்

அமுதுணவு தந்திடும் அன்னையைப் பார்
ஆசைமுத்தம் தந்திடும் தந்தையையும் பார்
இன்பத்தில் திளைக்கும் உறவினைப் பார்
இப்பாரினில் உன்னை வெறுப்பவர் யார்

இன்று பூத்த புத்தம்புது மலரே
இன்பக் கடலை ஈந்ததுன் வரவே
காண்பவர் நெஞ்சில் களிப்பினைத் தந்தாய்
கவலைகள் இன்றி கண்ணயர்ந் திடுவாய்

Thursday, November 5, 2009

இறைவன் எனக்கு பகைவன்

உனக்கும் மேலே இருக்கும் ஒருவன்
உன்னையும் என்னையும் படைத்திட்ட இறைவன்
(மத)கல்வரத்தை தடுத்திட வேண்டிய தலைவன்
தடுக்காமல் போனதால் எனக்கவன் பகைவன்...

Tuesday, November 3, 2009

காமமில்லா காதல்

அன்பை கொடுத்திட்டு
ஆதரவு காட்டிட்டு
இன்னலில் உடனிருந்து
ஈரேழு ஜென்மத்திலும்
உள்ளத்தால் ஒன்றுபட்டு
ஊடலால் பிரிந்தாலும்
எவ்வித நேரத்திலும்
ஏகமான நெஞ்சத்தில்
ஐயங்கள் இல்லாமல்
ஒன்றுபட்ட வாழ்வதனை
வாழ்வதற்கு ஆதாரம்
காமமில்லா காதலே….

Monday, November 2, 2009

காதல்-5

பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து பேசி விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
உன் உள்ளம் எனக்கு கொடு
உடலுக்கு உயிரை கொடு
நீயும் நானும் கோபம் கொண்டால் சண்டை ஆகுமா
சண்டை போட்டு பிரிந்து சென்றாலும் காதல் மாறுமா
பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
காதலில் காமம் கிடையாது
காதலில் தோல்வி கிடையாது
காதல் உறவினை பிரிக்காது
காதல் பகையை வளர்க்காது
காதல் என்ற கூட்டினுள்ளே
காதலர் வாழ வழி தேடு
பிரிவு பிரிவு தான் உறவு உறவு தான்
பிரிவின் வழியிலே உறவு வளருமே
பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து பேசி விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
உன் உள்ளம் எனக்கு கொடு
உடலுக்கு உயிரை கொடு
நீயும் நானும் கோபம் கொண்டால் சண்டை ஆகுமா
சண்டை போட்டு பிரிந்து சென்றாலும் காதல் மாறுமா