Wednesday, November 25, 2009

முத்தம்

1. உன்னிதழென்ன
நெப்பந்திஸ்ஸா
தேனையளித்து
உயிருறுஞ்சுதே....


2. ரோஜாவை
முள்குத்தும்
அதிசயம்
என்றேன்

என்னவென்று
எப்போதும்போல்
தெரியாதவளாய்
முகம்வைத்தாய்

என்னிதழை
உன்னிதழில்
பொருத்தி
இதுதானென்றேன்

வெட்கத்தோடு
முள்ளையேற்க
ரோஜாவை
அழுத்தினாய்

மீன்டும்
ஆரம்பமானது
முடிவில்லா
முத்தப்போராட்டம்....

3. வில்லான புருவம்
வளைய
மொட்டான கண்கள்
மூட
குடையான நாசி
துடிக்க
இதழோடு இதழ்
சேர்த்து

அடுத்த நொடி
இல்லையென்று
அமுதுணவை கடைந்
தெடுக்கும்
மத்தான நாவின்
சுழலில்
பித்தானேன் முத்தக்
களிப்பில்….

4. அள்ள அள்ளக் குறையாமல்
அமுதை வழங்கும்
உன் இதழென்ன
அட்சயப்பாத்திரமா….

5. வரவும் செலவும் வைக்க
முத்தமென்ன வியாபாரமா
நேசத்தில் பகிர்ந் துண்ணும்
இதழின் சாறல்லவா…

6. என்னதான்
இதழின் சாறை
தொலைபேசி கொணர்ந்தாலும்
காதலின் சாறை
இதழில் பெற்றிடும்
இன்பம் கிடைத்திடுமா…

7. உச்சி முகர்ந்து
நெற்றியில் இட்ட
முத்தம்
உள்ளக் களிப்பில்
கன்னத்தில் இட்ட
முத்தம்
ஊடல் பொழுதில்
உதட்டில் இட்ட
முத்தம்
அசை போட்டு
கண் அயரும்
நேரம்
ஆர்வத்தோடு
அன்பே உன்னைக்
கேட்டேன்
உறங்கும் நேரம்
எங்கு இடுவாய்
முத்தம்

8. எத்தனை காலம்
ஆனால் என்ன
முத்தக் கடலில்
மறந்து விடுமா
கைகள் நடுங்க
இதயம் படபடக்க
கன்னி இதழிலிட்ட
கன்னி முத்தம்…

9. காதலெனும்
மடலின் பரிமாற்றத்திற்கு
முத்திரையாய்
முத்தப் பரிமாற்றம்…

10. கண்களை மூடி ஓர்
உணவுப் பரிமாற்றம்
அது காதலை திறந்திடும்
முத்தப் பரிமாற்றம்…

11. உமிழ்நீரும் அமிழ்தாகும்
இரகசியம்
நம்மிதழ்கள் இனைவதின்
அதிசயம்...

12. சொந்தங்கள் சூழ்ந்த போது
சந்தோஷம் தந்திடுமே
சத்தம் இன்றி மனைவிக்கு
தருகின்ற திருட்டு முத்தம்...

13. உணவில்
சர்க்கரை கூடாதென்று
சொல்லும் நீயே
உன்னை அறியாமல்
இனிப்பை தருகின்றாய்
இதழின் இரசமாய்...

14. தொண்டைக் குழி
காயும் முன்னர்
இதழில் முத்தமதை
தந்து நீயும்
சண்டை செய்வோம்
வாடி பெண்ணே
நம்மிதழ் இனைத்து
நாவால்
சண்டை செய்வோம்
வாடி பெண்ணே..

15. முத்தம் தர
வரும் போது
வெட்கப்பட்டு
தலை குனிவாய்
பிடிக்கவில்லை(யோ)
என்றே நான்
திரும்பியே
அடி வைத்தால்
முகம் திருப்பி
மெதுவாக
இதழோடு இதழ்
சேர்ப்பாய்
காரனம் நான்
கேட்டால்
களுக் கென்று
சிரித்திடுவாய்...
புரியாமல் தினம்
நானும்
படும் அவஸ்தை
இரசித்திடுவாய்...
புதிராக இருந்த
போதும்
உனைத் தேடி
வருகின்றேன்...
அமிழ்தான உன்
இதழை
ருசி பார்க்க
துடிக்கின்றேன்...

16. பிரியும் போதும்
பிரிய மனமின்றி
பெருமூச்சோடு பிரியும்
நம் இதழ்கள்
அடுத்த ஆட்டத்தின்
எதிர்பார்ப்போடு…

17. தன்னை மொத்தமாய்ப்
பகிரும் புதுத்தம்பதிகளின்
முதலிரவும் ஆரம்பமாகும்
சிறு முத்தத்தோடே...

18. அலுவலகம் முடித்து
அலுப்பாய் வந்தாலும்
அன்பு மகள்(ன்)
கையை ஏந்தி
தத்தி தத்தி
நடந்து வந்தால்
அன்பாய் தூக்கி
மடியில் இருத்தி
முத்தாய் இடும்
முத்தத்தாலே
குளிர்ச்சியின் சிலிர்ப்பில்
ஈரம் ஆக்கும்
இன்பத்திற்கே
ஈடுமுண்டோ …

19. சட்டென்று இட்டுவிட்டு
பட்டென்று எங்கு மறைய
உயிரே உன்னைவிட்டு !
அன்பே என்னை
ஆரத் தழுவி
இதழில் ரசத்தை
ஈந்த உன்னை
உறவின் முன்பும்
ஊரின் முன்பும்
என்னவள் ஆக்குவேன்
ஏன் உனக்கு
ஐயம் என்மேல் ?
ஒன்றாய் கலந்த
உன்னைவிட்டு
ஓடிடேன் நானும்:
உடலை விட்டு
உயிரே போனாலும்…

20. முத்தத்திற்கு மட்டுமா
முகவுரை
என் மொத்தத்திற்குந்தானே
மூச்சாய் நீ இருக்க
முட்டுமோ
உன் பொழிவுரை

21. அடி கள்ளி
என் மேல்
இவ்வளவு விருப்பமா
கன்னத்தில்
முத்தம் கேட்டால்
கடித்து சொல்கிறாய்
கட்டிக்கரும்பாய்
இனிக்குதென்று...
உனக்கு
இனிப்பென்றால்
இதோ எடுத்துக்கொள்
மிச்சமிருக்கும்
கன்னத்தையும்...
கண்ணே மறந்துவிடாதே
கடித்த இடத்தில்
முத்தமென்ற மருந்தைப் போட

22. தொட்டால் மலரும்
மலரென்கிறாய்
உன்னை,
தொட்டுவிட்டாலோ
முகத்தை மூடும்
தொட்டாசினுங்கி ஆகிறாய்...

23. இது உங்களதா ?
தவறாக எண்ண வேண்டாம்
உங்களுக்காய்
இருக்கும் இதழில்
மழைதான் தொட்டதோ
என்றே தான்
தள்ளி விட்டேன்
மழையாய் இதழில்
மறுபடி தொடரு
என் மனாளா...

24. அன்னியமென்று
சொல்லி அமிலத்தை
ஊற்றாதே
இதழின் அமிழ்தெடுக்க
வந்த என்னை
ஏமாற்றலாகாதே...
இதயத்தில்
உள்ளவளே,
பல மலரின்
தேன் உண்ணும்
வண்டாயெனை
பார்க்காதே...

25. சன்டியனாய்
இருந்த என்னை
சாதுவாக மாற்றிய நீயே
இதழின்
சாறெடுக்க இன்று
சன்டியன் ஆக்கி னாயே...

26. இப்பொழுது தான்
வந்தமர்ந்தாய்
என்னருகே
நிலவுக்கென்ன அவசரம்
அதற்குள் உனைக்காண...
இந்த பகலவனுக்கும்
நிலாமகளுக்கும்
நேரமும் தெரிவதில்லை
நம்மை
நெருங்கவும் விடுவதில்லை...

27. நீ மறவா
முதல் முத்தம்
பித்தனாக
என்னை மாற்றி
போனதடி பூமகளே
பித்தத்தை தெளியவேனும்
மிச்சத்தை கொடுத்தென்னை
மீட்டிடுவாய் என்னவளே...

28. கனவிலோ
இதழ் மழையால்
நனைத்தேன் என்கிறாய்
நேரிலோ
இதழ் தூறலே
தரவும் மறுக்கிறாய்...

29. அமிழ்தம் புளிக்குமா
அன்பே,
மகளின் முத்தம்
கிடைக்கப் பெறுவது
மழலையில் மட்டுமே
மானே உனது
இதழின் சுவையோ
மரிக்கும் வரையில்
பொய் கோபம் தவிர்த்து
வருவாய் தொடர்வோம்
புதிதாய் முத்தமழை…

30. நேற்றோடு முடிந்ததா
என் கணக்கு
பொய்யுரை ஏனோ
பெண்மானே
உன்னிலும் என்னை
நேசிப்போர்
எவரிங்கே…
கோபம் தவிர்த்து
இதழின் இரசம்
எனக்களிப்பாய்…
புதிதாய்
தொடர்வோம்
முத்த மழை…

31. முத்தமழை தொடர்ந்திடவே
விரைந்தென்னை வாவென்றாய்
ஓடியே வந்தெனக்கு
இதழால், ஒத்தடமளித்து
பிரிகின்ற பொழுதினிலே
பிசினாக நின்றவளே…
பிரியாமல் முத்தமழை
தொடர்ந்திடவோர் வழியுரைப்பாய்,
சொர்க்கத்தின் சுகமதனை
நில்லாமல் சுவைத்திடுவே…

32. சாகித்ய அகாதமி
சாதித்ததற்காயல்ல
வற்றாத உன்னிதழின்
சாகசத்தை ஊக்குவித்து
இன்னுமொரு சாகசத்தை
இனிதாகத் தொடங்கிடவே….

33. பிரிவிலே உறவு
வளருமேயானாலும்
இதழின் பிரிவிலே
இதயம் துடிக்கவே மறுக்குதே…

34. பள்ளியறைப் பாடத்திலே
முதல் பாட முத்தமதை
இட்டதுமே சூடானேன்
சூடாக சுகமளித்து
மூச்சிரைக்க பிரியும் நேரம்
நெற்றியிலே இட்ட முத்தம்
நெஞ்சமெல்லாம் நிற்குதைய்யா
அடுத்தவொரு பயணத்திற்கு
அது அடிக்கல்லும் இட்டதைய்யா
முடிவொன்று இல்லாத
முத்தமொரு விந்தையய்யா…

35. உன்னிதழில்
கவி எழுத
கம்பனும்
குழம்புவானே
எங்கு தொடங்க
எங்கு முடிக்க
உன் இதழைப்
பதித்து
கற்பிப்பாய்
இம்முத்தக்கலையை…

No comments:

Post a Comment