பிணம் விழுந்ததால்
இறந்தவன் வீட்டில்
அடுப்பு அணைந்தது
பிணம் விழுந்ததால்
எரிப்பவன் வீட்டில்
அடுப்பு எரிந்தது
சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Saturday, October 31, 2009
ஆண்மகன்
இல்லற வாழ்க்கையில்
இல்லாலின் வசவுதனை
இதமாக தவிர்ப்பதாலே
இயலாதவனாக மாட்டான்
இல்லத்தை எதிர்நோக்கும்
இடர்களை களைத்தெறிய
இடைவிடாமல் போராடும்
போராளியான ஆண்மகன்...
இல்லாலின் வசவுதனை
இதமாக தவிர்ப்பதாலே
இயலாதவனாக மாட்டான்
இல்லத்தை எதிர்நோக்கும்
இடர்களை களைத்தெறிய
இடைவிடாமல் போராடும்
போராளியான ஆண்மகன்...
Friday, October 30, 2009
காதல் செய்வாய்
கண்களின் மொழியை அறிந்து கொள்ள
மௌனமாய் கதைகள் பேசிக் கொள்ள
மரணம் இல்லா வாழ்க்கை வாழ
மனிதா நீயும் காதல் செய்வாய்….
மௌனமாய் கதைகள் பேசிக் கொள்ள
மரணம் இல்லா வாழ்க்கை வாழ
மனிதா நீயும் காதல் செய்வாய்….
சொத்து
உன் முகம் கான
நான் பட்ட தவிப்பு
கண்ட பின்பு கண்கள்
பேசிக் கொண்ட துடிப்பு
உன் நினைப்பில் வாழும்
காலம் தரும் களிப்பு
என்றும் என்னை நீங்கா
உந்தன் அழியா சொத்து…
நான் பட்ட தவிப்பு
கண்ட பின்பு கண்கள்
பேசிக் கொண்ட துடிப்பு
உன் நினைப்பில் வாழும்
காலம் தரும் களிப்பு
என்றும் என்னை நீங்கா
உந்தன் அழியா சொத்து…
Monday, October 26, 2009
நான் யார்
நான் யாரென்று என்னை மறந்து விட்டேன். என்னைப் பற்றி சொல்கிறேன். யாரேனும் நான் யாரென்று சொல்லுங்களேன்...
உயிர் கொடுத்த நீயே
உதையும் கொடுக்கிறாய்
காயம் பட்ட இடத்தில்
மருந்தும் இடுகிறாய்
மருந் தாறும் முன்னே
மீன்டும் மிதிக்கிறாய்
குற்று யிராய் என்னை
தினமும் சிதைக்கிறாய்
கடும் சுமை தந்தே
தினமும் வதைக்கிறாய்
புது வசதி வந்ததும்
என்னை மறக்கிறாய்
என்பெயர் மறந் தென்னை
புலம்பவும் வைக்கிறாய்
முடிந்தால் நீ எனக்கு
என்பெயரை உரைத்திடுவாய்...
உயிர் கொடுத்த நீயே
உதையும் கொடுக்கிறாய்
காயம் பட்ட இடத்தில்
மருந்தும் இடுகிறாய்
மருந் தாறும் முன்னே
மீன்டும் மிதிக்கிறாய்
குற்று யிராய் என்னை
தினமும் சிதைக்கிறாய்
கடும் சுமை தந்தே
தினமும் வதைக்கிறாய்
புது வசதி வந்ததும்
என்னை மறக்கிறாய்
என்பெயர் மறந் தென்னை
புலம்பவும் வைக்கிறாய்
முடிந்தால் நீ எனக்கு
என்பெயரை உரைத்திடுவாய்...
ஆக்சிஜனாய் காதலிக்கிறேன்
1.இதயத்தின் சுவரில்
சுழன்று செல்லும்
வெறும் காற்றா நீ
இதயம் தன்னில்
இரண்டற கலக்கும்
ஆக்சிஜன் அன்றோ நீ...
2.இதயம் உள்ளே சுவாச காற்றாய்
மங்கையர் பலர் வந்த போதும்
இதயம் தன்னில் ஆக்சிஜன் காற்றாய்
மங்கை நீதான் தங்கிப் போனாய்...
சுழன்று செல்லும்
வெறும் காற்றா நீ
இதயம் தன்னில்
இரண்டற கலக்கும்
ஆக்சிஜன் அன்றோ நீ...
2.இதயம் உள்ளே சுவாச காற்றாய்
மங்கையர் பலர் வந்த போதும்
இதயம் தன்னில் ஆக்சிஜன் காற்றாய்
மங்கை நீதான் தங்கிப் போனாய்...
Wednesday, October 21, 2009
நிலாப்பெண்ணே...
என்னிரு கைகள்
ஏந்தியே வந்தேன்
நிலவே உன்னை
நிதமும் அனைத்திட...
அமுதுணவு நான் உண்ண
ஆசைப் பொருளாய் வந்தாய்
இரவினிலே ஓடி ஆட
வெளிச்சம் தந்து நின்றாய்
ஈசனது தலையில் நீயும்
பிறை நிலவாய் அமர்ந்தாய்
உலகமக்கள் தாகம் தீர்க்க
ஊற்றினைத் தோன்ட எண்ணி
எரிகுண்டை எறிந்த போதும்
ஏசுவாக அமைதி காத்தாய்
ஒற்றையாக நின்று நீயும்
உதவி பல செய்திட்டாய்
உன்னோடு கை கோர்க்க
என்னை நான் தருகின்றேன்
மறுக்காமல் எனை நீயும்
ஏற்பாயோ நிலாப் பெண்ணே…
ஏக்கம்-2
அழுகை உணர்வையும்
ஆனந்தம் ஆக்கி
இதயத்தில் நீயும்
ஈட்டியாய் தைத்து
உலகை மறந்திடும்
ஊடலை அளித்து
என்னை ஏனோ
ஏக்கத்தில் இருத்தி
ஐம்புலன்களை ஆக்கிரமித்து
ஒற்றையில் என்னை
தவித்திட வைத்து
ஓரமாய் நின்று
இரசிப்பது முறையோ!..
அருகில் வருவாய்
ஆனந்தம் தருவாய்
இதயத்தை தந்தே
ஈகையில் சிறப்பாய்
உறவை உணர்த்திட
ஊரார் முன்னே
என்னை நீயும்
ஏற்றுக் கொண்டு
ஐயம் தவிர்த்து
ஒன்றாய் வாழ
சம்மதம் தந்தே
ஓடி நீ வருவாய்....
ஆனந்தம் ஆக்கி
இதயத்தில் நீயும்
ஈட்டியாய் தைத்து
உலகை மறந்திடும்
ஊடலை அளித்து
என்னை ஏனோ
ஏக்கத்தில் இருத்தி
ஐம்புலன்களை ஆக்கிரமித்து
ஒற்றையில் என்னை
தவித்திட வைத்து
ஓரமாய் நின்று
இரசிப்பது முறையோ!..
அருகில் வருவாய்
ஆனந்தம் தருவாய்
இதயத்தை தந்தே
ஈகையில் சிறப்பாய்
உறவை உணர்த்திட
ஊரார் முன்னே
என்னை நீயும்
ஏற்றுக் கொண்டு
ஐயம் தவிர்த்து
ஒன்றாய் வாழ
சம்மதம் தந்தே
ஓடி நீ வருவாய்....
Saturday, October 17, 2009
தீபாவளி
சூரனின் மரண நாளில்
சூரியன் உதிக்கும் முன்னே
சிரசினில் எண்ணெய் தேய்த்து
சுடுநீரில் தலை முழுகி
சுட்டிகள் பட்டாசு வெடிக்க
சுவைமிகு இனிப்பை உண்டு
சுற்றத்தோடு வாழ்த்தை பகிரும்
சந்தோஷ திருநாளாம் தீபாவளி....
சூரியன் உதிக்கும் முன்னே
சிரசினில் எண்ணெய் தேய்த்து
சுடுநீரில் தலை முழுகி
சுட்டிகள் பட்டாசு வெடிக்க
சுவைமிகு இனிப்பை உண்டு
சுற்றத்தோடு வாழ்த்தை பகிரும்
சந்தோஷ திருநாளாம் தீபாவளி....
Tuesday, October 13, 2009
காதல்-4
காதல், புரிதலின் போது
கண்கள் கனிமொழி பேசும்
காதல், பிரிதலின் போது
கண்கள் கண்ணீரில் பேசும்
காதல், புரிதலின் போது
மனம் பட்டாம்பூச்சியாய் பறந்திடும்
காதல், பிரிதலின் போது
மனம் பரிதவிப்பால் பிசைந்திடும்...
கண்கள் கனிமொழி பேசும்
காதல், பிரிதலின் போது
கண்கள் கண்ணீரில் பேசும்
காதல், புரிதலின் போது
மனம் பட்டாம்பூச்சியாய் பறந்திடும்
காதல், பிரிதலின் போது
மனம் பரிதவிப்பால் பிசைந்திடும்...
Monday, October 12, 2009
ஆரம்ப கால கிறுக்கல் இது...
காதலியானவள் தன் பிரிந்து போன காதலனை நினைத்து உருகி பாடுவதாக அமைத்தது
காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா
காதல் நிலவ ல்லவா
அது காதலர்தம் கனவல்லவா
கண்களின் மொழியல்லவா
அது காலத்தின் நிணைவல்லவா
பாறைகள் சுரக்கும் நீரினைப்போல்
மனம் தரும் மலரல்லவா
வா வா கனவா, வாழ்வே நீயல்லவா
அணையா விளக்கல்லவா
குறைவிலா நிலவல்லவா
குளிருக்கு இதயமாய் இளமைமூட்டிய
அனலும் நீயல்லவா
தா தா மனம் தா,
மணந்தால் நான் மணையல்லவா
காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா
காதலியானவள் தன் பிரிந்து போன காதலனை நினைத்து உருகி பாடுவதாக அமைத்தது
காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா
காதல் நிலவ ல்லவா
அது காதலர்தம் கனவல்லவா
கண்களின் மொழியல்லவா
அது காலத்தின் நிணைவல்லவா
பாறைகள் சுரக்கும் நீரினைப்போல்
மனம் தரும் மலரல்லவா
வா வா கனவா, வாழ்வே நீயல்லவா
அணையா விளக்கல்லவா
குறைவிலா நிலவல்லவா
குளிருக்கு இதயமாய் இளமைமூட்டிய
அனலும் நீயல்லவா
தா தா மனம் தா,
மணந்தால் நான் மணையல்லவா
காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா
Friday, October 9, 2009
காதல் 3
கண்ணே வந்துவிடு
மௌனம் உடைத்துவிடு
மௌனம் உடைத்திட்டே
மனமதை தந்துவிடு
கானல் நீராய்நம்
காதலை ஆக்காதே
காதல் மனவாழ்வை
கனவாய் மாற்றாதே...
கண்ணால் கதைபேசி
காதலை வளர்த்ததையும்
தோளில் தலைசாய்த்து
துனிவை வளர்த்ததையும்
கையில் கைகோர்த்து
மனமாசை வளர்த்ததையும்
கண்ணே மறந்ததென்ன
என்னை வெறுப்பதென்ன...
மௌனம் உடைத்துவிடு
மௌனம் உடைத்திட்டே
மனமதை தந்துவிடு
கானல் நீராய்நம்
காதலை ஆக்காதே
காதல் மனவாழ்வை
கனவாய் மாற்றாதே...
கண்ணால் கதைபேசி
காதலை வளர்த்ததையும்
தோளில் தலைசாய்த்து
துனிவை வளர்த்ததையும்
கையில் கைகோர்த்து
மனமாசை வளர்த்ததையும்
கண்ணே மறந்ததென்ன
என்னை வெறுப்பதென்ன...
Thursday, October 8, 2009
களவு
கடலின் நீரை
கவர்ந்து சென்றது
கதிரவன் கண்கள்
காளையின் மனதை
கவர்ந்து சென்றது
கன்னியின் கண்கள்...
கவர்ந்து சென்றது
கதிரவன் கண்கள்
காளையின் மனதை
கவர்ந்து சென்றது
கன்னியின் கண்கள்...
கனவும் மனமும்
உன்னை உயர்வாய்
உருவகப் படுத்தி
உணர்வில் தொலைந்த
உயிர்களுக் கெல்லாம்
உறங்கும் போது
உருவம் கொடுத்து
உள்ளம் தனிலே
உலவும் உணர்வு
விழித்த பின்னே
விளங்கி கொள்ள
விழையும் மனமோ
வியப்பின் விளிம்பு...
உருவகப் படுத்தி
உணர்வில் தொலைந்த
உயிர்களுக் கெல்லாம்
உறங்கும் போது
உருவம் கொடுத்து
உள்ளம் தனிலே
உலவும் உணர்வு
விழித்த பின்னே
விளங்கி கொள்ள
விழையும் மனமோ
வியப்பின் விளிம்பு...
Friday, October 2, 2009
சூரியன்
அண்டம் முழுவதும்
ஆட்சி புரிந்திடும்
இருளை அகற்றும்
ஈடினை இல்லா
உழவுத் தொழிலின்
ஊட்டமாய் நின்று
எழில்மிகு இரதத்தில்
ஏவல் ஆளாய்
ஒன்பது கிரகத்தை
ஓட வைப்பவன்…
ஆட்சி புரிந்திடும்
இருளை அகற்றும்
ஈடினை இல்லா
உழவுத் தொழிலின்
ஊட்டமாய் நின்று
எழில்மிகு இரதத்தில்
ஏவல் ஆளாய்
ஒன்பது கிரகத்தை
ஓட வைப்பவன்…
Thursday, October 1, 2009
காதல்-2
கன்னிப் பெண்ணொருத்தி
கண்ணால் வலைவிரித்தாள்
அடங்கா காளையவனை
மனமென்னும் சிறையிலடைக்க...
காதலைப் பூட்டும்
மௌனத்திற்குத் தெரிவதில்லை
கண்ணெனும் சாவி
தன்னை உடைத்திடுமென்று...
மொட்டான உன்கண்கள் மலர்வதுவும் எப்போது
மலரான உன்னிதழ்கள் திறப்பதுவும் எப்போது
திறந்திட்டே காதலதை உரைப்பதுவும் எப்போது
உரைத்திட்டே எனைநீயும் உயிர்ப்பிப்பதும் எப்போது...
கண்ணால் வலைவிரித்தாள்
அடங்கா காளையவனை
மனமென்னும் சிறையிலடைக்க...
காதலைப் பூட்டும்
மௌனத்திற்குத் தெரிவதில்லை
கண்ணெனும் சாவி
தன்னை உடைத்திடுமென்று...
மொட்டான உன்கண்கள் மலர்வதுவும் எப்போது
மலரான உன்னிதழ்கள் திறப்பதுவும் எப்போது
திறந்திட்டே காதலதை உரைப்பதுவும் எப்போது
உரைத்திட்டே எனைநீயும் உயிர்ப்பிப்பதும் எப்போது...
Subscribe to:
Posts (Atom)