கண்ணே வந்துவிடு
மௌனம் உடைத்துவிடு
மௌனம் உடைத்திட்டே
மனமதை தந்துவிடு
கானல் நீராய்நம்
காதலை ஆக்காதே
காதல் மனவாழ்வை
கனவாய் மாற்றாதே...
கண்ணால் கதைபேசி
காதலை வளர்த்ததையும்
தோளில் தலைசாய்த்து
துனிவை வளர்த்ததையும்
கையில் கைகோர்த்து
மனமாசை வளர்த்ததையும்
கண்ணே மறந்ததென்ன
என்னை வெறுப்பதென்ன...
No comments:
Post a Comment