Thursday, October 1, 2009

காதல்-2

கன்னிப் பெண்ணொருத்தி
கண்ணால் வலைவிரித்தாள்
அடங்கா காளையவனை
மனமென்னும் சிறையிலடைக்க...

காதலைப் பூட்டும்
மௌனத்திற்குத் தெரிவதில்லை
கண்ணெனும் சாவி
தன்னை உடைத்திடுமென்று...

மொட்டான உன்கண்கள் மலர்வதுவும் எப்போது
மலரான உன்னிதழ்கள் திறப்பதுவும் எப்போது
திறந்திட்டே காதலதை உரைப்பதுவும் எப்போது
உரைத்திட்டே எனைநீயும் உயிர்ப்பிப்பதும் எப்போது...

No comments:

Post a Comment