Wednesday, October 21, 2009

ஏக்கம்-2

அழுகை உணர்வையும்
ஆனந்தம் ஆக்கி
இதயத்தில் நீயும்
ஈட்டியாய் தைத்து
உலகை மறந்திடும்
ஊடலை அளித்து
என்னை ஏனோ
ஏக்கத்தில் இருத்தி
ஐம்புலன்களை ஆக்கிரமித்து
ஒற்றையில் என்னை
தவித்திட வைத்து
ஓரமாய் நின்று
இரசிப்பது முறையோ!..

அருகில் வருவாய்
ஆனந்தம் தருவாய்
இதயத்தை தந்தே
ஈகையில் சிறப்பாய்
உறவை உணர்த்திட
ஊரார் முன்னே
என்னை நீயும்
ஏற்றுக் கொண்டு
ஐயம் தவிர்த்து
ஒன்றாய் வாழ
சம்மதம் தந்தே
ஓடி நீ வருவாய்....

No comments:

Post a Comment