Tuesday, September 29, 2009

தேடல்

கடற்கரை மணலில் கண்மூடி அமர்ந்திருந்தேன்
கண்ணாடி வளையலின் கனைப்பால் கண்திறந்தேன்
காட்சியாய் தெரிந்தாய் கானலாய் மறைந்தாய்
காலடி தடத்தால் கோலங்கள் பதித்தாய்

அலைகள் தடத்தை அழித்த போதும்
அழியா தடமாய் அமர்ந்தாய் என்னுள்
அலைகள் உணர்ந்த காதலை நானும்
அடைந்திட எண்ணி அலைந்திடு கின்றேன்

கண்களும் தேடிப் பூத்துப் போனது
கால்களும் நடந்தே சோர்ந்துப் போனது
அன்பே நீயும் எங்கிருக் கின்றாய்
அலையி டமாவது சொல்லி செல்வாய்…

Monday, September 28, 2009

புதுப்பாடம்

உலகையே ஒன்றாய் திரட்டி
உவகையை தருவோ மென்றெண்ணி
உதறிய உதவா பொருட்களா-என்
மழலையின் மங்கா செல்வம்
மகவின் மகிழ்வை மறந்தேபோன
மடமையால் நானும் சிறுமையானேன்
பாரையே சுற்றி கற்றதென்ன-என்
பாலகனிடம் பயின்றேன் புதுப்பாடம்

Friday, September 25, 2009

சந்தேகம்

ஒன்றான (ஏகம்) உள்ளம் தன்னில்
பிரிவு (சந்து) தனை தருவதாலே
பெயர் இட்டு அழைத்தினரோ
சந்தேகம் என்று சொல்லி...

ஏக்கம்

பாதம்பட்ட மண் துகளின்
பரிகசிப்பை தாளா அலைகள்
பாதமேனும் தழுவிட எண்ணி
பாடியே வருதல் போல்
பார்வைப்பட்ட மாந்தர் எல்லாம்
பரிகசித்துப் பேசும் முன்னர்
பாதமேனும் தழுவிக் கொள்ளும்
பாதுகையாக மாறிட லேனோ...

தயக்கம்

ஆயிரம் கதைகள் சொல்ல
ஆர்ப்பரித்து வந்திட்ட அலைகள்
அன்னமவள் கால்கள் வருடி
அமைதியாக திரும்புதல் போல
ஆசையைச் சொல்ல எண்ணி
ஆர்வமாய் சென்ற நானும்
அன்னமவள் கண்கள் வருடி
அமைதியாய் திரும்பி ட்டேனே...

Monday, September 21, 2009

நிம்மதி

பிறப்புக்கு முன் எங்கிருந்தோம் தெரியாது
இறப்புக்கு பின் எங்கிருப்போம் தெரியாது
பிறப்புக்கு முன் நிம்மதி என்றால்
இல்லாத ஒன்றின் கற்பனை ஊற்று
இறப்புக்கு பின் நிம்மதி என்றால்
தெரியாத ஒன்றின் தெளிவற்ற பேச்சு
வாழும் போது நிம்மதி என்பது
வசந்தம் நிறைந்த பூங்கா போன்றது
அனைவர் மீதும் அன்பை செலுத்து
அகிலமே தோன்றும் நிம்மதியின் உறைவிடமாய்...

வருத்தம்

அன்றும் வருந்தினான்
கருமை நிறம் அவனென்று
காதலதை மறுத்த தற்கு
இன்றும் வருந்தினான்
வெண்சேலை உடுத்தி அவளும்
விதவையென உரைத்த தற்கு

Sunday, September 20, 2009

நல்லவனா கெட்டவனா

நண்பர்களின் கேலி தன்னை
நாசூக்காக கடிந்து கொண்டால்
நீயே கெட்டவன்
நண்பர்களின் கேலி தன்னை
நகைச்சுவையாய் எடுத்துக் கொண்டால்
நீதான் நல்லவன்
காதலியின் கருத்த தற்கு
மறந்தும் மறுத்தா யானால்
நீயே கெட்டவன்
காதலியின் கருத்த தற்கு
மாடுபோல் தலை அசைத்தால்
நீதான் நல்லவன்.

கண் தானம்

அழுகிப்போன பழங்கள் கூட
ஆல்கஹாலைக் கொடுக்கும் போது
இறந்தபின்பு கண்ணை நாமும்
ஈந்திடலில் தயக்கம் ஏனோ!...

மக்கிப்போன மரத்தின் இழைகள்
மரத்திற்கே உரமாய் கொடுக்க
மறைந்தபின் மனிதன் கண்ணை
மனிதனுக்கே ஈந்திட லாமே......

Saturday, September 19, 2009

சென்னை மழை

கன்னிமாரா நூலகத்தில்

காத்திருக்கும் காதலியின்

கோபமான பேச்சுக்கு

காரணம் புரியாமல்

குழம்பியே பேருந்துக்காய்

காத்திருக்கும் எனக்காக

சொல்லாமல் வந்து

குற்றால அருவியாக

கண்ணீரை உதிர்த்திட்டாயோ

சென்னை மழையே!...

ஈரம்

மண்ணில் ஈரம் வேண்டும்
மரம் உயிர் வாழ – பெண்ணே
உன்மனதில் ஈரம் வேண்டும்
நான் உயிர் வாழ

ஊர்

தாயின் கருப்பையில் விதையாய் இருந்திட்டு

தரணியில் விழுந்ததும் கண்ணீரை தண்ணீராக்கி (தனக்கே நீராக்கி)

தங்குமிடம் தழைக்க வேரூன்றி வாழும்

தன்னலமில்லா மனிதனுக்கு தரணியே ஊராகும்.

Wednesday, September 16, 2009

மணமகளாகும் மகளுக்கு

மணமாகப் போகும் பெண்ணே
மனதிலே கலக்கம் ஏனோ
மங்கையாகப் பிறந்து விட்டால்
மறுவீடும் இயல்பு தானே
மகளாய் உனக்கு நான்
மறுப்பு எதுவும் கூறவில்லை
மரியாதை மானம் இரண்டும்
மறுவீட்டில் காப்பாய் பிள்ளை
மகவொன்றை ஈந்தெ னக்கு
மகிழ்ச்சியையும் தருவாய் கண்ணே
மழலையின் முகம் பார்த்து
மறந்திடுவேன் கவலை நானே…



பட்டினியால் பரிதவித்து
பாதி உயிர் போக வந்து
குடிக்கும்நீருக்காக
குழாயினுள் சிரம் நுழைத்து
குற்றுயிராய் கிடக்கின்றேன்
குன்டுமணி நீரேனும்
கொடுப்பாயா எனக்கென்று
கடுந்தவும் புரிகின்ற
குருவியின் தின்னம் என்னே!..

Tuesday, September 15, 2009

காதல் சுகமானது

வெறுத்து ஒதுக்கும் போது விதையாகவும்
மறக்க நிணைக்கும் போது மொட்டாகவும்
எதிர்ப்பு வரும் போது மலராகவும்
உள்ளத்தில் மலரும் காதல் சுகமானது

காதல்

காதலித்துப் பார்! அது
உனக்குள் ஒளிந்துள்ள
திறமையை உனக்கு
உணர்த்தும்
காதலித்துப் பார்! அது
உலகுக்கு உன்னை
உன்னத மனிதனாய்
காட்டும்
காதலித்துப் பார்! அது
உள்ளத்தை இணைத்து
உறவை வளர்க்க
செய்யும்
காதலித்துப் பார்! அது
மதங்களை அழித்து
மனித நேயத்தை
வளர்க்கும்

காதல்

அழுகை வந்தால் சொல்லி அனுப்பு
ஆறுதல் சொல்ல வருகிறேன்
தாகம் வந்தால் சொல்லி அனுப்பு
தண்ணீராக வருகிறேன்
உதவி என்றால் சொல்லி அனுப்பு
காற்றாய் ஓடி வருகிறேன்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
கல்லறையிலிருந்தாலும் வருகிறேன்

மனிதன்

அழகை ஆபத்தானதென ஒதுக்குபவன் மடையன்
ஆபத்தையும் அழகாக்குபவன் மனிதன்
கடவுளை தொழுவதே கடமை என்றிருப்பவன் மடையன்
கடமையை கடவுளாய் தொழுபவன் மனிதன்

பிறரை மட்டும் சார்ந்து வாழ்பவன் மடையன்
தன்னை பிறர் சார்ந்து வாழ செய்பவன் மனிதன்
தோல்வியை கண்டு துவன்டு விடுபவன் மடையன்
தோல்வியினின்றும் வெற்றியை தேடுபவன் மனிதன்

அறிவுரை

பெற்றொர் சொன்ன போது
பெரும் எரிச்சலாய் இருந்தது
உறவினர் சொன்ன போது
மனம் எரிமலையாய் பொங்கியது
ஆசிரியர் சொன்ன போது
அறுவையாய் தெரிந்தது
நன்பர்கள் சொன்ன போது
நக்கலாய் தெரிந்தது
அணைத்தையும் உதாசீனப்படுத்தியவனுக்கு
அனுபவிக்கும் போது அறிவுரையின் அர்த்தம் புரிந்தது

ஓரெழுத்து ஓர் மொழி

ஒர் எழுத்தே சொல்லாவது நமது தமிழ் மொழிக்குரிய பெருமைகளில் ஒன்று. இதனை ஓரெழுத்து ஓர்மொழி என்பர். தமிழில் மொத்தம் இவ்வாறு 42 ஓரெழுத்து ஓர் மொழி உள்ளது. இவற்றுள் சில் நாம் பழக்கத்தில் உபயோகப்படுத்துவது. மற்றும் சில இலக்கியங்களில் உள்ளது. இதோ உங்களுக்காக…
எழுத்து பொருள்
ஆ பசு
ஈ பூச்சி, கொடுத்தல்
ஊ இறைச்சி
ஏ அம்பு
ஐ ஐந்து, அழகு, தலைவன்
ஓ மதகு நீர் தாங்கும் பலகை
கா காத்தல்
சா இறத்தல்
தா கொடு
நா நான்
பா பாடல்
மா மாம்பழம், பெரியது
யா ஒரு வகை மரம்
வா அழை, கூப்பிடு
சீ இகழ்ச்சி குறிப்பு, ஒளி
மீ மேல்
தீ நெருப்பு
நீ நீவிர்
வீ மலர்
து உண்
கூ பூமி
மூ மூப்பு
தூ தூய்மை
பூ மலர்
சே எருது
தே கடவுள்
நே அன்பு
பே அச்சம்
மே மேல்
கை கைகள்
தை மாதங்களில் ஒன்று
நை வருத்தம், துன்பம்
பை கைப்பை
மை மசி
வை வைத்தல்
நொ வருத்து
கோ அரசன்
சோ மதில்
நோ துன்பம்
போ செல்
மோ மோத்தல்
வௌ திருடுதல்

ஓடிவா என்னோடு....

அமைதியை இழந்து

ஆடையை கிழித்து

இலக்கை தொலைத்து

ஈனமாய் போனேன்


உள்ளம் தொலைத்த

ஊடலால் இன்று

என்னை நானே

ஏசிக் கொண்டேன்


ஐயம் தொலைத்தென்

பிழையை பொறுத்திடு

ஒன்றாய் ஆவோம்

ஓடிவா என்னோடு....

தர்மசங்கடம்

காதலுக்கு கண்ணில்லை

அவளது கடைக்கண் அவன் மீது விழாத வரை

காதலிக்கும் மணமில்லை

மாற்றான் கையை மணவறையில் பிடிக்கும் வரை

அவனை நட்டாற்றில் விட

என் செய்வாள் மங்கை

பினவறையை தேடுவோம் என பெற்றோர் கூறும் போது

பரதேசி

அன்பை வாரிதந்த அம்மாவை விட்டு

ஆதரவாய் தோள்தந்த அப்பாவை விட்டு

இன்னலில் உதவிய உற்றாரை விட்டு

ஈசன் கோவிலின் இசையை விட்டு

உள்ளம் தொலைத்த ஊரனி விட்டு

ஊர் திருவிழாவின் உவகையை விட்டு

எடுத்து வளர்த்த பூனையை விட்டு

ஏற்றம் இரைத்த நிலத்தை விட்டு

ஒட்டிப் பிறவா நண்பனை விட்டு

ஓடி ஆடிய மைதானத்தையும் விட்டென

பலதையும் தொலைத்து பரதேசம் வந்து

பரதேசி ஆனேன் பாழும் பணத்திற்காக....

காதல்

காதல் ஒரு மடத்தனம் உணராதோர்க்கு

காதல் ஒரு மகத்துவம் உண்ர்ந்தோர்க்கு...

மேகம் என்று தான் எண்ணித் தொட்டேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் கூந்தலென்று

மீன்கள் என்று தான் எண்ணி ரசித்தேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் விழிகளென்று

கொவ்வைப்பழம் என்று தான் எண்ணி ரசித்தேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் இதழ்களென்று

நட்பு என்று தான் எண்ணிப் பழகினேன்

பின்புதான் தெரிந்தது அது அவள் மீது கொண்ட காதலென்று....

மனித நேயம் மலர செய்வோம்.

கண்ணில்லா குருடர்க்கும்
காதுகேளா செவிடர்க்கும்
கிழமான பெரியவர்க்கும்
கீழ்விழுந்தோரை எழும்புதற்கும்
குற்றுயிராய் உள்ளவர்க்கும்
கூன்விழுந்தோர் நடப்பதற்கும்
கேட்காமல் உதவிடவே
மனித நேயம் மலர செய்வோம்.

காதல்

இரந்து கிடைப்பதல்ல காதல்

இரு உள்ளம் இணைவதே காதல்

அணைவரும் அறிவதல்ல காதல்

அவர்கள் மட்டும் அறிவது காதல்...

காதலும் கல்லூரியும்

கானும் பொருளில் உன்னை கண்டு
கண்ணை மூடினால் கனவிலும் கண்டு
உணவைத் தொலைத்து உறக்கத்தையும் தொலைத்து
உறைவிடம் யாதென கனவில் கேட்டால்
உன்னுள்ளம் தானென சிரித்து சென்றாய்
காதல் இதுவென உணர்த்தி சென்றாய்
உணர்ந்த காதலை உரைத்திட எண்ணி
உருகி தவித்தேன் மணி(காலம்)தனை சபித்தேன்
உள்ளம் இளகி மணி(காலம்)யும் கரைந்தது
உன்னைக் கானும் நாளும் வந்தது
பொழுதும் புலர்ந்தது புதியதோர் யுகமாய்
பேருந்தும் தெரிந்தது புதியதோர் ரதமாய்
நாடியே வந்தேன் பரவச களிப்பால்
வாடியே போனேன் பாரா முகத்தால்
காண்போர் அணைவரையும் கடிந்து கொண்டேன்
காரணம் யாதென கலங்கி நின்றேன்
கால்மணி கழித்து திரும்பி பார்த்தாய்
காயமான நெஞ்சில் பால்தனை வார்த்தாய்
கடந்து போன விடுமுறை நாளில்
காணாமல் தவித்த கதைதனை சொன்னாய்
காதலரா என கண்டோர் கேட்ட போதும்
கண்களாலேயெ உணர்வை பரிமாறிய போதும்
காரணமின்றி உன்னிடம் கதைத்த போதும்
நட்பெனும் போர்வையில் திரிந்திட்ட நாமே
கல்லூரி தந்த விடுமுறை பிரிவில்
காதலை உணர்ந்த காதலர் ஆனோம்....