Wednesday, September 16, 2009

மணமகளாகும் மகளுக்கு

மணமாகப் போகும் பெண்ணே
மனதிலே கலக்கம் ஏனோ
மங்கையாகப் பிறந்து விட்டால்
மறுவீடும் இயல்பு தானே
மகளாய் உனக்கு நான்
மறுப்பு எதுவும் கூறவில்லை
மரியாதை மானம் இரண்டும்
மறுவீட்டில் காப்பாய் பிள்ளை
மகவொன்றை ஈந்தெ னக்கு
மகிழ்ச்சியையும் தருவாய் கண்ணே
மழலையின் முகம் பார்த்து
மறந்திடுவேன் கவலை நானே…

No comments:

Post a Comment