சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Tuesday, September 15, 2009
காதல்
அழுகை வந்தால் சொல்லி அனுப்பு ஆறுதல் சொல்ல வருகிறேன் தாகம் வந்தால் சொல்லி அனுப்பு தண்ணீராக வருகிறேன் உதவி என்றால் சொல்லி அனுப்பு காற்றாய் ஓடி வருகிறேன் காதல் வந்தால் சொல்லி அனுப்பு கல்லறையிலிருந்தாலும் வருகிறேன்
No comments:
Post a Comment