மேகம் என்று தான் எண்ணித் தொட்டேன்
பின்புதான் தெரிந்தது அது அவளின் கூந்தலென்று
மீன்கள் என்று தான் எண்ணி ரசித்தேன்
பின்புதான் தெரிந்தது அது அவளின் விழிகளென்று
கொவ்வைப்பழம் என்று தான் எண்ணி ரசித்தேன்
பின்புதான் தெரிந்தது அது அவளின் இதழ்களென்று
நட்பு என்று தான் எண்ணிப் பழகினேன்
பின்புதான் தெரிந்தது அது அவள் மீது கொண்ட காதலென்று....
No comments:
Post a Comment