சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Wednesday, March 17, 2010
கிறுக்கல் - 33
தொடாத தொட்டாற் சிணுங்கியாய்
சொல்ல துடித்த கவிதைகள்
தென்றலாயுன் பார்வையின் ஸ்பரிசத்தில்
சுருங்கிய தொட்டாற் சிணுங்கிபோல்
பிணைந்து குழறிய வார்த்தைகளாக
பார்வையின் ஸ்பரிசம் மறைய
மெதுமெதுவாய் மீண்டும் கவிதையாகி
மனதை அணுஅணுவாய் ஆக்கிரமிக்க
சொல்லாமல் கொல்லப்படுகிறது நம்காதல்...
கிறுக்கல் - 32
அப்பாவின் உருவில்
அப்பாவின் வேட்டி
அம்மாவிற்கு சேலையாய்
விதவைத் தாயை
வெரி(றி)த்திடும் மகன்(ள்)...
கொலை செய்ய புறப்பட்டவன்
திரும்பி வந்து நீர் அருந்துகிறான்
அமங்கலி எதிரில் வந்ததை அப சகுனமென்றே...
Sunday, March 14, 2010
வரிகள் மாற்றப்பட்டது ( இராஜ்ஜியமா இல்லை இமயமா)
ஆஷ்ரமா இல்லை ஆசையா
எங்கிவன் நாளை எங்கிவன்
சாமியா இல்லை பாவியா
யாரிவன் நாளை யாரிவன்
ஆயிரம் ரகசியம்
அமைந்தது நித்தி ஆஷ்ரமம்
ஆயிரம் ரகசியம்
அமைந்தது நித்தி ஆஷ்ரமம்
கேலியாய் வாழ்கிறான்
காமத்தை ஆள்கிறான்
ஆஷ்ரமா இல்லை ஆசையா
ஆஷ்ரமா இல்லை ஆசையா
இறை எங்கே இறை எங்கே எனத்தேட
கதவைத் திறந்திடு என்றவனே
புத்தகம் ஒன்றிலே தொடர் ஆக
இறையைச் சொன்னாய் அழகாக
இறையெங்கு உள்ளது தேடாமல்
இச்சை தீர்த்து நின்றாயே
சுகம் இது சுகம் இது என எண்ணி
கட்டில் பாடம் படித்தாயே
உடல் அழுக்கு ஆனாலும்
தவ றில்லை என்பாயே
மனஅழுக்கு ஒன்றேதான்
தவறு என்று சொல்வாயே
ஆசையும் இன்பமும்
இரண்டையும் கொண்டதேன்
ஆயிரம் கோடி இரகசியம்
அமைந்தது நித்தி ஆஷ்ரமம்
இறைபற்றி மேடையில் நாள்தோறும்
ஆற்றினானே சொற்பொழிவாய்
பாமர மக்களின் பணத்தினிலே
கட்டினானே ஆசிரமம?
திருமகன் வருகிற திருநீரை
கையை அசைத்து தினம் அளித்து
அதிசயம் அதிசயம் என்றேதான்
ஏய்த்துநின்றாய் ஊராரை…
தனதருஞ் சீடரை
தொட்டிடும் ஆசான்தான்
சிந்தையில் இவனென்றும்
மன்மத ராசாதான்
ஏய்ந்தவர் பார்வையில்
முழு மிருகமாய்த் தெரிகிறான்…
ஆஷ்ரமா இல்லை ஆசையா
ஆஷ்ரமா இல்லை ஆசையா …
Friday, March 12, 2010
கிறுக்கல் - 31
Thursday, March 11, 2010
கிறுக்கல் - 30
Wednesday, March 10, 2010
கிறுக்கல் - 29
வேலை செய்து களைத்த பின்னும்
நண்பர் குழாம் காண எண்ணி
மடலைப் பார்க்க இனையம் திறக்க
மட்டுனர் பணி இருக்க கண்டு
நன்கு பழகிய நண்பன் என்று
நம்பி மடலை திறவா தனுப்ப
அபத்த மடலை அனுமதித்த தெவரென்று
ஆயிரம் கேள்வி நண்பர்கள் கேட்க
சிந்தியாமல் செய்த தவறை நினைத்து
சிந்தினேன் கண்ணீர் எனக்குள் நானே…
கிறுக்கல் - 28
கிறுக்கல் - 27
ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்டு
ஒருகை தானாய் குறிப்பும் எழுத
மைதானத்தில் ஆடும் ஆட்டம் கண்டு
மறுகை குறுஞ்செய்தி நண்பனுக்கு அனுப்ப
பக்கத்து இருக்கையில் அமர்பவன் உடனே
பலகதை பேசியும் சிரித்தும் மகிழ
உனக்கும் கூட இத்தனை திறமையா
வியந்தவர் இன்றும் வியந்தே பார்ப்பர்
எங்கோ வெறித்திடும் என்னைக் கண்டு
உன்னால் எனக்குள் எத்துனை மாற்றம்…
Tuesday, March 9, 2010
கிறுக்கல் - 26
Saturday, March 6, 2010
கிறுக்கல் - 25
கிறுக்கல் - 24
Friday, March 5, 2010
கிறுக்கல் - 23
சாமி யார்என உணர்த்தும்
சாமியார் நான் என்றவனை
சாமியே நீயென உரைத்து
சரணான சமூகம் இன்று
சாமியல்ல நம்போல் வெறும்
ஆசாமி என்றதும் அவனை
சன்மானம் தந்த கைகளால்
செருப்பையும் நெருப்பையும் தருது…
தலைமையைச் சென்று பார்க்கும்
தலைவராய் அனுப்பு என்றவனை
தலைமையே நீயாகு என்றே
தலைமையாக்கிய சமூகம் என்று
தலைவன் அல்ல அவன்-நம்
தலையை அடம் வைக்கும்
தறுதலை என்று உணர்ந்து-அவன்
Tuesday, March 2, 2010
கிறுக்கல் - 22
அனுபவப் பாடம் பெற
ஆரம்பமாய் தேடும் படலம்
இனியேனும் வேலை செய்து
ஈன்றோரை முகம் மலர்த்த
உள்ளத்தில் உறுதி பூண்டு
ஊர் ஊராய்த் தேடி நின்றேன்
எனக்கான ஒரு வேலை
ஏக்கந்தீர கிடைத்த போதும்
ஐயங்கள் மேலிட மெல்ல
ஒவ்வொன்றாய் களைந்து நானும்
ஓடியே உழைத்து நின்றேன்
ஔசித்திய உயர்வே குறியாய்…