Sunday, March 14, 2010

வரிகள் மாற்றப்பட்டது ( இராஜ்ஜியமா இல்லை இமயமா)

ஆஷ்ரமா இல்லை ஆசையா

எங்கிவன் நாளை எங்கிவன்

சாமியா இல்லை பாவியா

யாரிவன் நாளை யாரிவன்

ஆயிரம் ரகசியம்

அமைந்தது நித்தி ஆஷ்ரமம்

ஆயிரம் ரகசியம்

அமைந்தது நித்தி ஆஷ்ரமம்

கேலியாய் வாழ்கிறான்

காமத்தை ஆள்கிறான்

ஆஷ்ரமா இல்லை ஆசையா

ஆஷ்ரமா இல்லை ஆசையா

இறை எங்கே இறை எங்கே எனத்தேட

கதவைத் திறந்திடு என்றவனே

புத்தகம் ஒன்றிலே தொடர் ஆக

இறையைச் சொன்னாய் அழகாக

இறையெங்கு உள்ளது தேடாமல்

இச்சை தீர்த்து நின்றாயே

சுகம் இது சுகம் இது என எண்ணி

கட்டில் பாடம் படித்தாயே

உடல் அழுக்கு ஆனாலும்

தவ றில்லை என்பாயே

மனஅழுக்கு ஒன்றேதான்

தவறு என்று சொல்வாயே

ஆசையும் இன்பமும்

இரண்டையும் கொண்டதேன்

ஆயிரம் கோடி இரகசியம்

அமைந்தது நித்தி ஆஷ்ரமம்

இறைபற்றி மேடையில் நாள்தோறும்

ஆற்றினானே சொற்பொழிவாய்

பாமர மக்களின் பணத்தினிலே

கட்டினானே ஆசிரமம?

திருமகன் வருகிற திருநீரை

கையை அசைத்து தினம் அளித்து

அதிசயம் அதிசயம் என்றேதான்

ஏய்த்துநின்றாய் ஊராரை…

தனதருஞ் சீடரை

தொட்டிடும் ஆசான்தான்

சிந்தையில் இவனென்றும்

மன்மத ராசாதான்

ஏய்ந்தவர் பார்வையில்

முழு மிருகமாய்த் தெரிகிறான்…

ஆஷ்ரமா இல்லை ஆசையா

ஆஷ்ரமா இல்லை ஆசையா …

No comments:

Post a Comment