Friday, March 5, 2010

கிறுக்கல் - 23

சாமி யார்என உணர்த்தும்

சாமியார் நான் என்றவனை

சாமியே நீயென உரைத்து

சரணான சமூகம் இன்று

சாமியல்ல நம்போல் வெறும்

ஆசாமி என்றதும் அவனை

சன்மானம் தந்த கைகளால்

செருப்பையும் நெருப்பையும் தருது…

தலைமையைச் சென்று பார்க்கும்

தலைவராய் அனுப்பு என்றவனை

தலைமையே நீயாகு என்றே

தலைமையாக்கிய சமூகம் என்று

தலைவன் அல்ல அவன்-நம்

தலையை அடம் வைக்கும்

தறுதலை என்று உணர்ந்து-அவன்

தலையைக் கொய்வதும் என்று…?

No comments:

Post a Comment