அனுபவப் பாடம் பெற
ஆரம்பமாய் தேடும் படலம்
இனியேனும் வேலை செய்து
ஈன்றோரை முகம் மலர்த்த
உள்ளத்தில் உறுதி பூண்டு
ஊர் ஊராய்த் தேடி நின்றேன்
எனக்கான ஒரு வேலை
ஏக்கந்தீர கிடைத்த போதும்
ஐயங்கள் மேலிட மெல்ல
ஒவ்வொன்றாய் களைந்து நானும்
ஓடியே உழைத்து நின்றேன்
ஔசித்திய உயர்வே குறியாய்…
No comments:
Post a Comment