Wednesday, March 10, 2010

கிறுக்கல் - 27

ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்டு

ஒருகை தானாய் குறிப்பும் எழுத

மைதானத்தில் ஆடும் ஆட்டம் கண்டு

மறுகை குறுஞ்செய்தி நண்பனுக்கு அனுப்ப

பக்கத்து இருக்கையில் அமர்பவன் உடனே

பலகதை பேசியும் சிரித்தும் மகிழ

உனக்கும் கூட இத்தனை திறமையா

வியந்தவர் இன்றும் வியந்தே பார்ப்பர்

எங்கோ வெறித்திடும் என்னைக் கண்டு

உன்னால் எனக்குள் எத்துனை மாற்றம்…

No comments:

Post a Comment