Monday, September 28, 2009

புதுப்பாடம்

உலகையே ஒன்றாய் திரட்டி
உவகையை தருவோ மென்றெண்ணி
உதறிய உதவா பொருட்களா-என்
மழலையின் மங்கா செல்வம்
மகவின் மகிழ்வை மறந்தேபோன
மடமையால் நானும் சிறுமையானேன்
பாரையே சுற்றி கற்றதென்ன-என்
பாலகனிடம் பயின்றேன் புதுப்பாடம்

No comments:

Post a Comment