Tuesday, September 29, 2009

தேடல்

கடற்கரை மணலில் கண்மூடி அமர்ந்திருந்தேன்
கண்ணாடி வளையலின் கனைப்பால் கண்திறந்தேன்
காட்சியாய் தெரிந்தாய் கானலாய் மறைந்தாய்
காலடி தடத்தால் கோலங்கள் பதித்தாய்

அலைகள் தடத்தை அழித்த போதும்
அழியா தடமாய் அமர்ந்தாய் என்னுள்
அலைகள் உணர்ந்த காதலை நானும்
அடைந்திட எண்ணி அலைந்திடு கின்றேன்

கண்களும் தேடிப் பூத்துப் போனது
கால்களும் நடந்தே சோர்ந்துப் போனது
அன்பே நீயும் எங்கிருக் கின்றாய்
அலையி டமாவது சொல்லி செல்வாய்…

No comments:

Post a Comment