கடற்கரை மணலில் கண்மூடி அமர்ந்திருந்தேன்
கண்ணாடி வளையலின் கனைப்பால் கண்திறந்தேன்
காட்சியாய் தெரிந்தாய் கானலாய் மறைந்தாய்
காலடி தடத்தால் கோலங்கள் பதித்தாய்
அலைகள் தடத்தை அழித்த போதும்
அழியா தடமாய் அமர்ந்தாய் என்னுள்
அலைகள் உணர்ந்த காதலை நானும்
அடைந்திட எண்ணி அலைந்திடு கின்றேன்
கண்களும் தேடிப் பூத்துப் போனது
கால்களும் நடந்தே சோர்ந்துப் போனது
அன்பே நீயும் எங்கிருக் கின்றாய்
அலையி டமாவது சொல்லி செல்வாய்…
No comments:
Post a Comment