Wednesday, October 21, 2009

நிலாப்பெண்ணே...




என்னிரு கைகள்
ஏந்தியே வந்தேன்
நிலவே உன்னை
நிதமும் அனைத்திட...







அமுதுணவு நான் உண்ண

ஆசைப் பொருளாய் வந்தாய்

இரவினிலே ஓடி ஆட

வெளிச்சம் தந்து நின்றாய்

ஈசனது தலையில் நீயும்

பிறை நிலவாய் அமர்ந்தாய்

உலகமக்கள் தாகம் தீர்க்க

ஊற்றினைத் தோன்ட எண்ணி

எரிகுண்டை எறிந்த போதும்

ஏசுவாக அமைதி காத்தாய்

ஒற்றையாக நின்று நீயும்

உதவி பல செய்திட்டாய்

உன்னோடு கை கோர்க்க

என்னை நான் தருகின்றேன்

மறுக்காமல் எனை நீயும்

ஏற்பாயோ நிலாப் பெண்ணே…


No comments:

Post a Comment