Monday, October 26, 2009

நான் யார்

நான் யாரென்று என்னை மறந்து விட்டேன். என்னைப் பற்றி சொல்கிறேன். யாரேனும் நான் யாரென்று சொல்லுங்களேன்...

உயிர் கொடுத்த நீயே
உதையும் கொடுக்கிறாய்
காயம் பட்ட இடத்தில்
மருந்தும் இடுகிறாய்
மருந் தாறும் முன்னே
மீன்டும் மிதிக்கிறாய்
குற்று யிராய் என்னை
தினமும் சிதைக்கிறாய்
கடும் சுமை தந்தே
தினமும் வதைக்கிறாய்
புது வசதி வந்ததும்
என்னை மறக்கிறாய்
என்பெயர் மறந் தென்னை
புலம்பவும் வைக்கிறாய்
முடிந்தால் நீ எனக்கு
என்பெயரை உரைத்திடுவாய்...

No comments:

Post a Comment