சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Saturday, October 17, 2009
தீபாவளி
சூரனின் மரண நாளில் சூரியன் உதிக்கும் முன்னே சிரசினில் எண்ணெய் தேய்த்து சுடுநீரில் தலை முழுகி சுட்டிகள் பட்டாசு வெடிக்க சுவைமிகு இனிப்பை உண்டு சுற்றத்தோடு வாழ்த்தை பகிரும் சந்தோஷ திருநாளாம் தீபாவளி....
No comments:
Post a Comment