Monday, October 12, 2009

ஆரம்ப கால கிறுக்கல் இது...

காதலியானவள் தன் பிரிந்து போன காதலனை நினைத்து உருகி பாடுவதாக அமைத்தது

காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா
காதல் நிலவ ல்லவா
அது காதலர்தம் கனவல்லவா
கண்களின் மொழியல்லவா
அது காலத்தின் நிணைவல்லவா
பாறைகள் சுரக்கும் நீரினைப்போல்
மனம் தரும் மலரல்லவா
வா வா கனவா, வாழ்வே நீயல்லவா
அணையா விளக்கல்லவா
குறைவிலா நிலவல்லவா
குளிருக்கு இதயமாய் இளமைமூட்டிய
அனலும் நீயல்லவா
தா தா மனம் தா,
மணந்தால் நான் மணையல்லவா
காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா

No comments:

Post a Comment