Monday, November 2, 2009

காதல்-5

பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து பேசி விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
உன் உள்ளம் எனக்கு கொடு
உடலுக்கு உயிரை கொடு
நீயும் நானும் கோபம் கொண்டால் சண்டை ஆகுமா
சண்டை போட்டு பிரிந்து சென்றாலும் காதல் மாறுமா
பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
காதலில் காமம் கிடையாது
காதலில் தோல்வி கிடையாது
காதல் உறவினை பிரிக்காது
காதல் பகையை வளர்க்காது
காதல் என்ற கூட்டினுள்ளே
காதலர் வாழ வழி தேடு
பிரிவு பிரிவு தான் உறவு உறவு தான்
பிரிவின் வழியிலே உறவு வளருமே
பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து பேசி விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
உன் உள்ளம் எனக்கு கொடு
உடலுக்கு உயிரை கொடு
நீயும் நானும் கோபம் கொண்டால் சண்டை ஆகுமா
சண்டை போட்டு பிரிந்து சென்றாலும் காதல் மாறுமா

No comments:

Post a Comment