Thursday, November 19, 2009

காதல்-6

கற்பை மட்டும் கண்டால் காதல் தெரியாது
காதல் மட்டும் கண்டால் கைம்பெண் தெரியாது
கற்பு காதலில் மறையும் என்றும்
காதல் கற்பிலே மறையாது
காதல் தூய்மையை பார்க்கும் நெஞ்சம்
கற்பில் தூய்மையை பார்க்காது
காமக் கண்ணில் பார்த்தால் மாறும் காதல்தான்
காதல் கண்ணில் பார்த்தால் விதவையும் காதலிதான்
விதவையென்று ஆன உடனே வாழ்க்கை முடியாது
வீட்டினுள்ளே அடைந்து அவளும் வாழ்ந்திட கூடாது
விதவை சொல்லினை மாற்றிட முயலும்
மறு மணங்களோ தோற்காது
மக்கள் பேச்சால் பெண்கள் மறுமண
முடிவை மாற்றிட கூடாது
அன்பை மட்டும் பார்ப்பது தூயகாதல் தான்
தூயகாதல் வாழ்வின் அஸ்திவாரம் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் காம காதல்தான்
காதலிலே சிறந்ததிந்த கைம்பெண் காதல்தான்
கற்பை மட்டும் கண்டால் காதல் தெரியாது
காதல் மட்டும் கண்டால் கைம்பெண் தெரியாது

No comments:

Post a Comment