Saturday, November 7, 2009

குழந்தாய்

அமுதுணவு தந்திடும் அன்னையைப் பார்
ஆசைமுத்தம் தந்திடும் தந்தையையும் பார்
இன்பத்தில் திளைக்கும் உறவினைப் பார்
இப்பாரினில் உன்னை வெறுப்பவர் யார்

இன்று பூத்த புத்தம்புது மலரே
இன்பக் கடலை ஈந்ததுன் வரவே
காண்பவர் நெஞ்சில் களிப்பினைத் தந்தாய்
கவலைகள் இன்றி கண்ணயர்ந் திடுவாய்

No comments:

Post a Comment