அமுதுணவு தந்திடும் அன்னையைப் பார்
ஆசைமுத்தம் தந்திடும் தந்தையையும் பார்
இன்பத்தில் திளைக்கும் உறவினைப் பார்
இப்பாரினில் உன்னை வெறுப்பவர் யார்
இன்று பூத்த புத்தம்புது மலரே
இன்பக் கடலை ஈந்ததுன் வரவே
காண்பவர் நெஞ்சில் களிப்பினைத் தந்தாய்
கவலைகள் இன்றி கண்ணயர்ந் திடுவாய்
No comments:
Post a Comment