அம்மாவின் வசவுகளை
அனாயசமாய் புறந்தள்ளி
உறக்கம் கலைந்ததும்
ஆழ்ந்த சிந்தனையில்
யாரோ எவரோ
என்னைத் துரத்த
இன்ன காரணம்
என்றே விளங்கா
உள்ள(த்தின்) பயத்தின்
உந்துதலால் வந்த
இயற்கை உபாதை
இம்சை தொலைய
வெளியே சென்றே
வெளியேற்றி வந்தோம்
இருந்தும் எப்படி
ஈரம் படுக்கையில்
கடிந்திடும் அம்மாவிடம்
எப்படி சொல்ல
கனவில் நடந்ததை
குழப்பத்தில் குழந்தை… J
No comments:
Post a Comment