Wednesday, February 24, 2010

கிறுக்கல் - 14

எதையும் சிந்தியாமல்
ஏதாவது எழுத
எழுதிட அமர
எண்ணங்கள் நகரா
எழுத்தும் நகரா
எழுதாமல் நிற்க
எனக்குள் தொடங்கியது
எழுத்துடன் போர்...

பலகுரல் கலைஞன்

எவர் போலவும் பேசுவேன்
எதுபோலவும் பேசுவேன்
இறுமாப்புடனே அலைந்திருந்தான்
மகவொன்றின் மழலையைக் கேட்காதவரை...


வெறுமை

காகித வெ(வ)றுமையை
நிரப்பிடத் துடிக்கும்
மைநிறை எழுதுகோல்
மனதை அறியா
எழுத்துகள் கிடைக்கா
எண்ணத்தில் வெ(வ)றுமை...

No comments:

Post a Comment