Friday, February 19, 2010

கிறுக்கல் -10

என்னை அறிய
எனக்குள் என்னை
அனுதினம் தேடி
அறிய முடியாமல்
அலைந்த களைப்பால்
அயர்ந்து உறங்கி
அறிந்ததாய் எண்ணி
அமரும் சமயம்
ஆழ்ந்த உறக்கம்
அழைப்பினை விடுக்க
மீண்டு வருவேன்
மீன்டும் என்னை
நான் யாரென்று
நானே அறிய…

No comments:

Post a Comment