Thursday, February 11, 2010

கிறுக்கல் - 8

மண்ணில்நான் பிறக்கையிலே

பெற்றவர்கள் மறைந்துவிட

மாமனவர் எனைவளர்த்த

கதையதனை நீஅறிவாய்

மாமனவர் மகளவட்கு

மணநாளும் முடிவாக

மகிழ்ச்சியோடு நானுமவள்

மணவேலை செய்துநின்றேன்

மாமன்மகள் மணமுடிந்தால்

மனதில்வாழ் நம்காதலதை

மாமனிடம் சொல்லிடலாம்

மனக்கணக்கை நான்போட்டேன்

மணநாளில் மணமகனோ

மாற்றாளுடன் ஓடிவிட

மாமனவர் செய்வதறியா

மலைப்புடனே சோர்ந்துவிழ

மாமன்குடி அழிந்திடவும்

மணமேடை மயானமாயும்

மாறிடாமல் தடுத்திடவே

மணக்கோலம் நான்பூண்டேன்.

கரம்பிடிப்பேன் உனையென்றே

காதலியே சொன்னேன்தான்

எனைவளர்த்தோர் யாசிக்க

என்செய்வேன் சொல்லிடுவாய்…


No comments:

Post a Comment