Friday, February 5, 2010

கிறுக்கல் - 5

அன்பின் அரவணைப்பில்

ஆண்டவனின் பரிசளிப்பாய்

இதமாய்க் கருவறையில்

ஈரைந்து மாதங்கள்

உறக்கத்தில் கழித்துவிட்டு

ஊழ்வினை அறுத்தெறிய

எடுத்த பிறவியென்றே

ஏகமாய் உணர்ந்துவிட்டு

ஐயமின்றி இறையுணர்ந்து

ஒறுத்தலுண்டு பாவிக்கென

ஓடையைப்போல் வாழ்ந்தேயுந்தன்

ஔசித்தியம் உயர்த்திடுவாய்

No comments:

Post a Comment