ஏனிந்த பிறவியோ முருகா – என்னை
எதற்காக படைத்தாயோ முருகா
என்செய்தேன் பாவங்கள் முருகா – மீண்டும்
பிறவாமல் இருக்கவே வழியேது முருகா
பிறப்பதனைத் தந்தாலும் முருகா – உன்னை
பிரியாத வரம்வேண்டும் என்வாழ்வில் முருகா
குறையில்லா உடல்வேண்டாம் முருகா – சிறுகுறை
ஒன்றை நான்கேட்பேன் அதுவேண்டும் முருகா
குறையென்றால் குறையில்லை முருகா – நோயாம்
பசியாக்கும் வயிறில்லா உடல்வேண்டும் முருகா
உண்ணாமல் இருந்தாலும் முருகா – உன்னெண்ணத்தால்
உடல்வாட்டம் இல்லாமை வேண்டுமென் முருகா…
உயிராலும் உணர்வாலும் முருகா – உன்பேரை
மறவாத நிலைவேண்டும் முருகா
உலகைநான் பிரிந்திடினும் முருகா – உன்பதமலராய்
பூஜிக்கும் நிலைவேண்டும் முருகா…
4 comments:
நன்று. நன்றி பிரசாத்.
வாழ்த்துகள்
மிகவும் அருமை பிரசாத்
மு மு நி
நன்றி அக்கா...
நன்றி ஐயா...
Post a Comment