Monday, July 25, 2011

ஆடி கிருத்திகை ஸ்பெஷல்

ஏனிந்த பிறவியோ முருகா – என்னை

எதற்காக படைத்தாயோ முருகா

என்செய்தேன் பாவங்கள் முருகா – மீண்டும்

பிறவாமல் இருக்கவே வழியேது முருகா


பிறப்பதனைத் தந்தாலும் முருகா – உன்னை

பிரியாத வரம்வேண்டும் என்வாழ்வில் முருகா

குறையில்லா உடல்வேண்டாம் முருகா – சிறுகுறை

ஒன்றை நான்கேட்பேன் அதுவேண்டும் முருகா


குறையென்றால் குறையில்லை முருகா – நோயாம்

பசியாக்கும் வயிறில்லா உடல்வேண்டும் முருகா

உண்ணாமல் இருந்தாலும் முருகா – உன்னெண்ணத்தால்

உடல்வாட்டம் இல்லாமை வேண்டுமென் முருகா…


உயிராலும் உணர்வாலும் முருகா – உன்பேரை

மறவாத நிலைவேண்டும் முருகா

உலகைநான் பிரிந்திடினும் முருகா – உன்பதமலராய்

பூஜிக்கும் நிலைவேண்டும் முருகா…

4 comments:

ராமலக்ஷ்மி said...

நன்று. நன்றி பிரசாத்.

சா.கி.நடராஜன். said...

வாழ்த்துகள்
மிகவும் அருமை பிரசாத்
மு மு நி

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி ஐயா...

Post a Comment