சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Thursday, July 21, 2011
காதலிக்கலாம் வா - 3
வரமதை வேண்டி பெண்பாவாய் தவமாய் தொடர்ந்தேன் பலநாளாய் கண்மொழி படித்தே என்வாழ்வின் - முதல் காதலைச் சொன்னேன் நீ கேளாய்
பதிலது வேண்டி காத்திருக்கேன் விதியெது என்று சோர்ந்திருக்கேன் நாணத்தை விடுத்து சொல்லிவிடு - உயர் காதலோ சாதலோ தந்துவிடு...
No comments:
Post a Comment