Thursday, July 21, 2011

காதலிக்கலாம் வா - 3

வரமதை வேண்டி பெண்பாவாய்
தவமாய் தொடர்ந்தேன் பலநாளாய்
கண்மொழி படித்தே என்வாழ்வின் - முதல்
காதலைச் சொன்னேன் நீ கேளாய்

பதிலது வேண்டி காத்திருக்கேன்
விதியெது என்று சோர்ந்திருக்கேன்
நாணத்தை விடுத்து சொல்லிவிடு - உயர்
காதலோ சாதலோ தந்துவிடு...

No comments:

Post a Comment