கூப்பிடு தூரத்தில் பள்ளிக்கூடமிருந்தும்
முதல் ஆளாகவும் கடைசி ஆளாகவுமே
வருகிறான் போகிறான்… வகுப்பறைக்கு அவன்…
எனது கேள்விகள் மாணவரைத் தேடும்போதெல்லாம்
கூனிக் குறுகி ஒளிந்துக்கொள்ளவே பார்க்கிறான்…
இத்தனைக்கும் படிப்பில் மோசமில்லை அவன்.!
ஆட்டம் பாட்டம் ஓட்டம்… ஏன்…
சிறுநீர் கழிக்கவும் வெளிச்செல்ல மறுக்கிறான்…
என்ன ஆயிற்று இவனுக்கு.!
இன்றெப்படியும் கேட்டு விட வேண்டும்…
எல்லா மாணவர்களும் போனபின்
எழுந்து வரச்சொன்னேன் என்னிடம்…
நெருங்கி வந்தவனை என்கேள்வி தொடுமுன்னே
தொட்டது என்னை “ஏய், போஸ்ட்பாக்ஸ்”….
ஜன்னலிலிருந்து.!!!
1 comment:
நல்ல கவிதை. மனதைத் தொட்டது முடிவு.
Post a Comment