Saturday, August 20, 2011

துவங்கும் வாழ்க்கை

நேற்று வரை ஏன்
இன்று காலை வரைக் கூட
இந்தப் படபடப்பு இல்லையே...

எப்படி?
எப்படி ஒட்டிக் கொண்டது படபடப்பு
இப்போது மட்டும்...

மேளம் வாசிப்பவர்களால் இருக்குமோ...
இல்லையே...
காலையில் இருந்து வாசிக்கிறார்களே...

பட்டுச்சட்டை வேட்டியிலிருந்து
ஒட்டி இருக்குமோ
குழப்பமாக இருக்கிறதே...

ஆங்...
ஐயரின் மந்திர வார்த்தைகளால் இருக்குமோ
இருக்கலாம்... இருக்கலாம்...

அடடா... என்ன இது...
கை அதிகம் படபடக்கிறதே... ஆண்டவா.!
தாலிச்சரடு கை நழுவக்கூடாதே...

ஸ்ஸ்ஸ்.... அப்பாடா...
ஒருவழியாய் முடிந்துவிட்டது...
தாலி கட்டி முடிந்து விட்டது...

என்ன முடிந்துவிட்டது...
இப்போதுதானே ஆரம்பிக்கிறது...
இனிதே இல்வாழ்க்கை.!

No comments:

Post a Comment