Tuesday, August 16, 2011

எதிர்பாராதவை

எதிர்பார்க்கும் எவரும் கொடுப்பதில்லை என்றாள்
என்னவோ என ஏறிட்டுப் பார்த்தேன்...
அன்பைதான் என்றாள் ஓரவிழி சிரிப்போடு.!

வாங்கியதைக் கொடுக்கையில் ரெட்டை மகிழ்வென்றாள்
என்னவோ என ஏக்கத்துடன் பார்த்தேன்...
அன்பைதான் என்றாள் உள்ளூர நகைப்போடு.!

சுவைக்க சுவைக்க திகட்டவில்லை என்றாள்
அன்பையா என்று அமைதியாகக் கேட்டேன்...
இதழ்பதித்து போனாள் பேசி;மூடா என்னிதழோடு.!

No comments:

Post a Comment