Monday, August 1, 2011

எப்படி மாறினேன் நான்

எப்படி மாறினேன் நான்???

முதலில்
வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தாலும் - குறைகளைத்
தேடிக் களையவே விழைந்தேன்...

பின்னொரு நாள்
வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தாலும் - குறைகளை
வாங்கிக் கொள்ளவே விழைந்தேன்...

இன்றோ
வாழ்த்தை விரும்பி - குறைகளை
வார்த்தை ஜாலத்தால் விலக்குகிறேன்...

எது மாற்றியது என்னை...

யோசித்திருக்கும் வேளையில்
ஒலிக்கிறது என்னுள்
"நீதான் சரி"

எப்படி மாறினேன் நான்...

No comments:

Post a Comment