எப்படி மாறினேன் நான்???
முதலில்
வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தாலும் - குறைகளைத்
தேடிக் களையவே விழைந்தேன்...
பின்னொரு நாள்
வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தாலும் - குறைகளை
வாங்கிக் கொள்ளவே விழைந்தேன்...
இன்றோ
வாழ்த்தை விரும்பி - குறைகளை
வார்த்தை ஜாலத்தால் விலக்குகிறேன்...
எது மாற்றியது என்னை...
யோசித்திருக்கும் வேளையில்
ஒலிக்கிறது என்னுள்
"நீதான் சரி"
எப்படி மாறினேன் நான்...
No comments:
Post a Comment