Wednesday, August 10, 2011

சுயம்

பாங்காய் நாடகமொன்று
பாதி முடிந்திருக்க
போட்ட வேடமது
மேடை புழுக்கத்தினால்
வழியும் வியர்வைபட்டு
கலைய இளித்துநிற்கும்
அவல நிலையினதாம்
மறைத்த சுயங்களெலாம்
மறைவை விட்டுவரும்
மனிதனின் ஒப்பனைகள்...

நாடக வேளையிலே
கலையும் ஒப்பனைதாம்
மறைவை விட்டுவரும்
மறைத்த சுயங்களுமே...

No comments:

Post a Comment