அதிகாலைப்பொழுதில்
மயிலிறகால் கால்பெருவிரல் வருடும்
சுமையான சுகமில்லை...
சுப்ரபாதமாய் கேட்கும்
"நேரமாச்சு எந்திரிங்க"
ம்ஹூம், இன்னும் இல்லை...
காலைக்கடனுக்கு முன்னே
கமகமக்கும் காபியும் இல்லை...
நாளிதழ் முடிக்கும் முன்னே
"நாழியாச்சு.. குளிங்க..."
இல்லை...
என்ன ஆயிற்று இன்று?
தட்டுத்தடுமாறி
கைத்தடியால் ஊன்றி
தேடிச் சென்று பார்க்கிறேன்...
தொலைத்த பொருளையெல்லாம்
தேடித் தந்தவள் - வராமல் உறங்குகிறாள்...
நானென் வாழ்க்கையைத் தொலைத்துநிற்க.!
No comments:
Post a Comment