Saturday, August 20, 2011

தொலைந்த வாழ்க்கை

அதிகாலைப்பொழுதில்
மயிலிறகால் கால்பெருவிரல் வருடும்
சுமையான சுகமில்லை...

சுப்ரபாதமாய் கேட்கும்
"
நேரமாச்சு எந்திரிங்க"
ம்ஹூம், இன்னும் இல்லை...

காலைக்கடனுக்கு முன்னே
கமகமக்கும் காபியும் இல்லை...
நாளிதழ் முடிக்கும் முன்னே
"
நாழியாச்சு.. குளிங்க..."
இல்லை...

என்ன ஆயிற்று இன்று?

தட்டுத்தடுமாறி
கைத்தடியால் ஊன்றி
தேடிச் சென்று பார்க்கிறேன்...

தொலைத்த பொருளையெல்லாம்
தேடித் தந்தவள் - வராமல் உறங்குகிறாள்...
நானென் வாழ்க்கையைத் தொலைத்துநிற்க.!

No comments:

Post a Comment