அரும்பு மீசை துளிர்த்த வயதில்
குறும்பாய் ஆரம்பித்த மோகம்
அனைவர்க்கும் காதலி மீது
எனக்கோ காதல் மீது...
ஆம்.!
காதலைக் காதலிக்கத் தொடங்கினேன்...
முகமில்லாக் காதலின் முகம்தேடி
ஏகப்பட்ட கற்பனைகள் எனக்குள்...
ஒரு முகமும் நிலைக்கவில்லை
நிலைக்கவில்லையா.!.
இல்லை... இல்லை...
பிடிபடவில்லை
தொடுதலில் மாறிடும்
பாதரசத் திரவமாய்...
எத்தனை வடிவம் இந்த காதலுக்குத்தான்...
வியப்பின் விக்கிப்பில்...
விதையாய் விழுந்த காதல்
விருட்சமாய் இன்று...
விருட்சத்தின் விரிப்பில் ஒதுங்கவில்லை யாரும்...
இன்னும் நிழலுக்காய்...
தருதலிலும் அனுபவித்தலிலும்???
எவ்வாறிருக்கும் நிழலின் நிகழ்வுகள்...
தொடங்கும் முன்னே
கேள்வி என்முன்...
No comments:
Post a Comment